யாரும் பக்கத்தில் இல்லை
வண்ணதாசனின் இந்த வரியை
நான் பார்த்துக் கொண்டிருந்தபோது
அவரும் பார்த்துக்கொண்டிருந்தார் என்னை
Thursday, July 23, 2009
தனிமை நட்பாகிறது
தனிமை நட்பாகிறது என்ற
இந்த கவிதையை
நீங்கள் வாசிக்கும்போது
நட்பாகி விடுகிறீர்கள்
கவிதைக்கும் எனக்கும்
இந்த கவிதையை
நீங்கள் வாசிக்கும்போது
நட்பாகி விடுகிறீர்கள்
கவிதைக்கும் எனக்கும்
Tuesday, July 21, 2009
வெற்றிடத்தில் ஒரு குறிப்பு
அந்தக் கதையில்
நிறைய அறைகள் இருந்தன
ஒவ்வொருவராகப் புகுந்து
வெளியேறிக் கொண்டிருந்தனர்
அந்தக் கதையில்
நிறைய ஜன்னல்கள் இருந்தன
காற்றும் இசையும்
உள் நிறைந்து
வெளி வந்தது
அந்தக் கதையில்
நிறைய மரங்கள் இருந்தன
அணிலும் பறவைகளும் விளையாடின
அந்தக் கதையில்
விதைகள் நடப்பட்டிருந்தது
படிக்கப் படிக்க
பூத்துக் குலுங்கியது
அந்தக் கதையில்
மழை பெய்தது
வானவில் தென்பட்டது
கடவுள் குழந்தைகளோடு
பேசிக்கொண்டிருந்தார்
அந்தக் கதையில்
வாசிப்புத் தன்மை
கடைசி பக்கத்திலிருந்தும்
படிப்பதுபோல் அமைந்திருந்தது
முன்னிருந்தும் பின்னிருந்தும்
படித்துக் கொண்டே வந்தவர்கள்
சந்தித்துக் கொண்டார்கள்
வெற்றிடமான பக்கங்களில்
அமைதியாக உங்களைப் படியுங்கள்
என்ற குறிப்பு மட்டும்
காணப்பட்டது
நிறைய அறைகள் இருந்தன
ஒவ்வொருவராகப் புகுந்து
வெளியேறிக் கொண்டிருந்தனர்
அந்தக் கதையில்
நிறைய ஜன்னல்கள் இருந்தன
காற்றும் இசையும்
உள் நிறைந்து
வெளி வந்தது
அந்தக் கதையில்
நிறைய மரங்கள் இருந்தன
அணிலும் பறவைகளும் விளையாடின
அந்தக் கதையில்
விதைகள் நடப்பட்டிருந்தது
படிக்கப் படிக்க
பூத்துக் குலுங்கியது
அந்தக் கதையில்
மழை பெய்தது
வானவில் தென்பட்டது
கடவுள் குழந்தைகளோடு
பேசிக்கொண்டிருந்தார்
அந்தக் கதையில்
வாசிப்புத் தன்மை
கடைசி பக்கத்திலிருந்தும்
படிப்பதுபோல் அமைந்திருந்தது
முன்னிருந்தும் பின்னிருந்தும்
படித்துக் கொண்டே வந்தவர்கள்
சந்தித்துக் கொண்டார்கள்
வெற்றிடமான பக்கங்களில்
அமைதியாக உங்களைப் படியுங்கள்
என்ற குறிப்பு மட்டும்
காணப்பட்டது
Saturday, July 11, 2009
பெய்யும் கணங்களில்...
ஜன்னலோரம்
கவனிப்பாரற்று ஹார்மோனியம்
பெய்யும் கணங்களில்
ஹார்மோனியம் கேட்கிறது
மழையின் ஓசை
மழை கேட்கிறது
ஹார்மோனியத்தின் இசை
கவனிப்பாரற்று ஹார்மோனியம்
பெய்யும் கணங்களில்
ஹார்மோனியம் கேட்கிறது
மழையின் ஓசை
மழை கேட்கிறது
ஹார்மோனியத்தின் இசை
Tuesday, July 07, 2009
குழந்தை அருவி
தான் வரைந்ததைக் காட்டி
கேட்கிறாள் சிறுமி
அருவி என்கிறார் அப்பா
ஓவியத்தை மேல்கீழாக்கி
என்ன என்கிறாள்
இது தப்பு என்கிறார்
தலைகீழாய் யோகா
செய்யும் அருவி என்கிறாள்
சிரித்தபடி
தூக்கி கொஞ்சுகிறார் தந்தை
குழந்தை அருவியை
(ஜெஸிக்காவுக்கு)
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
கேட்கிறாள் சிறுமி
அருவி என்கிறார் அப்பா
ஓவியத்தை மேல்கீழாக்கி
என்ன என்கிறாள்
இது தப்பு என்கிறார்
தலைகீழாய் யோகா
செய்யும் அருவி என்கிறாள்
சிரித்தபடி
தூக்கி கொஞ்சுகிறார் தந்தை
குழந்தை அருவியை
(ஜெஸிக்காவுக்கு)
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
நட்பும் வரிகளும்
அவசரமாய்ப் போகிறேன்
அப்புறம் பேசுவோம்
என்றார் ஒரு நண்பர்
இம்முறையும்
பிறகு பார்க்கலாம் என
அலைபேசியை அணைத்தாள்
ஒரு தோழி
கடிதப் போக்குவரத்தை
நிறுத்திவிட்ட நண்பர்
ஈமெயிலில் தென்படுவதும்
குறைந்து போயிற்று
கோயிலில் பழக்கமான புது நண்பர்
பக்தி பரவசத்தில்
சில வார்த்தைகளோடு
சென்று விடுகிறார்
தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும்
நண்பனின் புன்னகையை
செய்தி முடியும் நேரத்தில்
அரிதாகப் பார்க்க முடிகிறது
குவிந்து கிடக்கின்றன மனதில்
நட்பும் வரிகளும்
தனிமையோடு நடக்கிறது
கபடி விளையாட்டு
யார் மீதும்
வருத்தம் வைக்க
விரும்பவில்லை
எப்போதும் போல்
நிதானமாய்ப் பார்த்து
தலை அசைத்து
நலம் விசாரிக்கிறது
பால்கனி செடி
இப்போது அதில்
புதிதாய்
ஒற்றைப்பூ
அப்புறம் பேசுவோம்
என்றார் ஒரு நண்பர்
இம்முறையும்
பிறகு பார்க்கலாம் என
அலைபேசியை அணைத்தாள்
ஒரு தோழி
கடிதப் போக்குவரத்தை
நிறுத்திவிட்ட நண்பர்
ஈமெயிலில் தென்படுவதும்
குறைந்து போயிற்று
கோயிலில் பழக்கமான புது நண்பர்
பக்தி பரவசத்தில்
சில வார்த்தைகளோடு
சென்று விடுகிறார்
தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும்
நண்பனின் புன்னகையை
செய்தி முடியும் நேரத்தில்
அரிதாகப் பார்க்க முடிகிறது
குவிந்து கிடக்கின்றன மனதில்
நட்பும் வரிகளும்
தனிமையோடு நடக்கிறது
கபடி விளையாட்டு
யார் மீதும்
வருத்தம் வைக்க
விரும்பவில்லை
எப்போதும் போல்
நிதானமாய்ப் பார்த்து
தலை அசைத்து
நலம் விசாரிக்கிறது
பால்கனி செடி
இப்போது அதில்
புதிதாய்
ஒற்றைப்பூ
Saturday, July 04, 2009
நா...ம்
நாம் பிரிந்ததற்கு
பெரிய காரணம்
எதுவுமில்லை
சேரலாம் எனும்போது
அதிகமாகி இருந்தது
காரணங்களின் கூட்டுத்தொகை
பெரிய காரணம்
எதுவுமில்லை
சேரலாம் எனும்போது
அதிகமாகி இருந்தது
காரணங்களின் கூட்டுத்தொகை
கதை சொல்லி
பாட்டியை எல்லோருக்கும்
கதை சொல்லியாகத்தான் தெரியும்
வாயைத் திறந்தால்
கதைகளாகக் கொட்டும்
ஒவ்வொரு முறையும்
விடுபடும் புதுக்கதை
ஊரில் பெரியவர் முதல்
சிறியவர் வரை
பாட்டி கதைக்குள் அடக்கம்
படிப்பறிவில்லாத பாட்டியிடமிருந்து
எப்படி வருகின்றன கதைகள்
என்ற பிரமிப்பு ஊருக்குள் உண்டு
திரும்ப நினைக்கையில்
பாட்டி சொன்ன கதை
அட்சரம் பிசகாமல் கண்முன் விரியும்
பாட்டியின் கதைகளில்
மழை பெய்யும்
கதையில் வந்த விலங்குகள்
குழந்தைகளுக்கு நட்பாயின்
ஒரு மழைநாளில்
கதை சொல்லி பாட்டி
படுத்த படுக்கையானாள்
ஊரை நிசப்தமாக்கிவிட்டு
முடங்கிப்போனாள்
பாட்டியின் கண்களில்
தேங்கி நின்றது
சொல்ல முடியாத கதை
ஊர்ப் பெரியவரை
அருகே வரச் சொல்லி
பாட்டி முணுமுணுத்ததை
பிறகு அவர்
எல்லோரிடமும் சொன்னார்
எனக்கு எமன்
கதை சொல்லிக்கிட்டிருக்கான்
போங்க பிறகு பாப்போம்
கதை சொல்லியாகத்தான் தெரியும்
வாயைத் திறந்தால்
கதைகளாகக் கொட்டும்
ஒவ்வொரு முறையும்
விடுபடும் புதுக்கதை
ஊரில் பெரியவர் முதல்
சிறியவர் வரை
பாட்டி கதைக்குள் அடக்கம்
படிப்பறிவில்லாத பாட்டியிடமிருந்து
எப்படி வருகின்றன கதைகள்
என்ற பிரமிப்பு ஊருக்குள் உண்டு
திரும்ப நினைக்கையில்
பாட்டி சொன்ன கதை
அட்சரம் பிசகாமல் கண்முன் விரியும்
பாட்டியின் கதைகளில்
மழை பெய்யும்
கதையில் வந்த விலங்குகள்
குழந்தைகளுக்கு நட்பாயின்
ஒரு மழைநாளில்
கதை சொல்லி பாட்டி
படுத்த படுக்கையானாள்
ஊரை நிசப்தமாக்கிவிட்டு
முடங்கிப்போனாள்
பாட்டியின் கண்களில்
தேங்கி நின்றது
சொல்ல முடியாத கதை
ஊர்ப் பெரியவரை
அருகே வரச் சொல்லி
பாட்டி முணுமுணுத்ததை
பிறகு அவர்
எல்லோரிடமும் சொன்னார்
எனக்கு எமன்
கதை சொல்லிக்கிட்டிருக்கான்
போங்க பிறகு பாப்போம்
Friday, July 03, 2009
ஒரே தூரம்
நீங்கள் அதிகப்படுத்திக் கொண்டாலும்
நான் குறைத்துக் கொண்டாலும்
உங்களுக்கும் எனக்கும்
இடையில் இருப்பது
ஒரே தூரம்தான்
நான் குறைத்துக் கொண்டாலும்
உங்களுக்கும் எனக்கும்
இடையில் இருப்பது
ஒரே தூரம்தான்
Tuesday, June 30, 2009
Friday, June 26, 2009
வழி மாற்றிய ஒற்றன்
என்னை
வழி மாற்றி அனுப்பிய
ஒற்றனைப்
பார்க்க நேர்ந்தது
அவன் இருந்தான்
ஏறக்குறைய என்
முக சாயலில்
வழி மாற்றி அனுப்பிய
ஒற்றனைப்
பார்க்க நேர்ந்தது
அவன் இருந்தான்
ஏறக்குறைய என்
முக சாயலில்
Thursday, June 25, 2009
மீண்டும் பிறக்கிறது...
உதிரமாகிக்
கொட்டுகிறது கனவு
உக்கிரமாகி
சுடுகிறது இரவு
தன்னை புணர்ந்து
தன்னில் இறந்து
மீண்டும் பிறக்கிறது காமம்
விலங்கின் பற்களுடன்
கொட்டுகிறது கனவு
உக்கிரமாகி
சுடுகிறது இரவு
தன்னை புணர்ந்து
தன்னில் இறந்து
மீண்டும் பிறக்கிறது காமம்
விலங்கின் பற்களுடன்
Wednesday, June 24, 2009
ஒரு நடை பயணத்தில்...
ஒரு நடை பயணத்தில்
பேசிக்கொண்டு போனார்கள்
தந்தையும் மகனும்
வானத்தில் சிறகடிக்கும் பறவை
உனக்குத் தெரிகிறதா
இல்லை எனக்கு
வானம் ஒரு
பறவையின் சிறகாகத்
தெரிகிறது
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
பேசிக்கொண்டு போனார்கள்
தந்தையும் மகனும்
வானத்தில் சிறகடிக்கும் பறவை
உனக்குத் தெரிகிறதா
இல்லை எனக்கு
வானம் ஒரு
பறவையின் சிறகாகத்
தெரிகிறது
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
ஊர்ந்து போகும் ரயில்
படிக்கும் புத்தகத்தின்
வரிகளுக்கிடையே
ஊர்ந்து போகிறது
வேகமாகச் செல்லும்
இந்த ரயில்
வரிகளுக்கிடையே
ஊர்ந்து போகிறது
வேகமாகச் செல்லும்
இந்த ரயில்
அப்பாவின் ரெயின்கோட்
தந்தையின் ரெயின்கோட்டில்
போகும் மகன் உணர்கிறான்
அப்பா நனைவது போன்று
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
போகும் மகன் உணர்கிறான்
அப்பா நனைவது போன்று
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
Sunday, June 21, 2009
மலையின் கருணை
தற்கொலை உச்சிக்கு வந்தவனை
இறங்கிப் போகச் செய்கிறது
மலையின் கருணை
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
இறங்கிப் போகச் செய்கிறது
மலையின் கருணை
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
Thursday, June 18, 2009
கடந்து போன வரிகள்
வெட்டப்பட்ட மரம்
துளிர்த்தது
இறந்துபோன முதியவர்
உயிர் பெற்றார்
ஒரு நட்சத்திரம்
அருகில் வந்து
முத்தமிட்டுச் சென்றது
மணல் அடியில்
கிடந்த வளையல் துண்டுகள்
கண்ணீரைக் காட்டின
கடல் மீன்
கரைக்கு வந்து
வார்த்தைகளைக்
கொட்டிவிட்டுப் போனது
இயற்கையின் பரிசுத்தத்தை
வீணாக்கியவர்கள்
தூக்கு தண்டனைப் பெற்றனர்
உதிர்ந்த இலை
உள்ளங்கையில்
விழும்போது
பூவாகி இருந்தது
சேமித்து வைக்கப்பட்ட கோடுகள்
ஓவியங்களாக
மாறிக்கொண்டே வந்தன
ஆண்துணை
தேடிய ஒருவன்
நகரத்து வீதிகளில்
அலைந்து கொண்டிருந்தான்
கடந்து போன
வரிகளைப் பார்த்தபடி
நடந்து கொண்டிருந்தேன் நான்
துளிர்த்தது
இறந்துபோன முதியவர்
உயிர் பெற்றார்
ஒரு நட்சத்திரம்
அருகில் வந்து
முத்தமிட்டுச் சென்றது
மணல் அடியில்
கிடந்த வளையல் துண்டுகள்
கண்ணீரைக் காட்டின
கடல் மீன்
கரைக்கு வந்து
வார்த்தைகளைக்
கொட்டிவிட்டுப் போனது
இயற்கையின் பரிசுத்தத்தை
வீணாக்கியவர்கள்
தூக்கு தண்டனைப் பெற்றனர்
உதிர்ந்த இலை
உள்ளங்கையில்
விழும்போது
பூவாகி இருந்தது
சேமித்து வைக்கப்பட்ட கோடுகள்
ஓவியங்களாக
மாறிக்கொண்டே வந்தன
ஆண்துணை
தேடிய ஒருவன்
நகரத்து வீதிகளில்
அலைந்து கொண்டிருந்தான்
கடந்து போன
வரிகளைப் பார்த்தபடி
நடந்து கொண்டிருந்தேன் நான்
கிளி பொம்மை விற்கும் சிறுமி
கிளி பொம்மை
விற்கிறாள் சிறுமி
வெயிலின் கடுமை
அவள் கால்களை
நிற்க விடாமல் செய்கிறது
ஒவ்வொரு வாகனமாய் ஓடி
கிளி பொம்மையை நீட்டி
வாங்கிக் கொள்ளும்படி
வேண்டுகிறாள்
சிக்னல் விழுவதற்குள்
ஓரிரு பொம்மைகளை
விற்க வேண்டும் என்ற
ஏக்கம் தெரிகிறது
அவள் கண்களில்
தூரத்திலிருந்து
விரட்டுகிறாள் அம்மா
ஒரு காரின்
கண்ணாடி இறங்குகிறது
ஒரு கை நீண்டு
பொம்மையை வாங்குகிறது
பணத்தை வாங்கிக் கொண்டு
சிறுமி சிரிக்க
சிக்னல் விழுகிறது
காரில் ஆடிக்கொண்டே செல்கிறது
கிளி பொம்மை
சிறுமியின் பெயரை
சொல்லியபடி
விற்கிறாள் சிறுமி
வெயிலின் கடுமை
அவள் கால்களை
நிற்க விடாமல் செய்கிறது
ஒவ்வொரு வாகனமாய் ஓடி
கிளி பொம்மையை நீட்டி
வாங்கிக் கொள்ளும்படி
வேண்டுகிறாள்
சிக்னல் விழுவதற்குள்
ஓரிரு பொம்மைகளை
விற்க வேண்டும் என்ற
ஏக்கம் தெரிகிறது
அவள் கண்களில்
தூரத்திலிருந்து
விரட்டுகிறாள் அம்மா
ஒரு காரின்
கண்ணாடி இறங்குகிறது
ஒரு கை நீண்டு
பொம்மையை வாங்குகிறது
பணத்தை வாங்கிக் கொண்டு
சிறுமி சிரிக்க
சிக்னல் விழுகிறது
காரில் ஆடிக்கொண்டே செல்கிறது
கிளி பொம்மை
சிறுமியின் பெயரை
சொல்லியபடி
Saturday, June 13, 2009
Sunday, June 07, 2009
பிடுங்கப்பட்ட உயிர்
நீ எந்த மரத்திலிருந்து
பிடுங்கப்பட்ட உயிர்
தன் பென்சிலிடம் கேட்டபடி
இந்த வரிகளை
எழுதிப் பார்க்கிறாள்
ஒரு சிறுமி
பிடுங்கப்பட்ட உயிர்
தன் பென்சிலிடம் கேட்டபடி
இந்த வரிகளை
எழுதிப் பார்க்கிறாள்
ஒரு சிறுமி
அழகான கூண்டு
பார்க்க அழகாக இருக்கிறது
எப்படி இந்த
குற்றவாளி கூண்டை செய்தீர்கள்
நண்பருக்குச் சொன்னேன்
இது குற்றங்களால்
செய்யப்பட்ட கூண்டு
எப்படி இந்த
குற்றவாளி கூண்டை செய்தீர்கள்
நண்பருக்குச் சொன்னேன்
இது குற்றங்களால்
செய்யப்பட்ட கூண்டு
Monday, June 01, 2009
வெற்றுக்கோப்பை
வெற்றுக்கோப்பை போதும்
என் தாகம் தீர்க்க
நீர் நிரம்பிய பாத்திரங்கள்
அதிகரிக்கவே செய்யும்
தாகத்தை
என் தாகம் தீர்க்க
நீர் நிரம்பிய பாத்திரங்கள்
அதிகரிக்கவே செய்யும்
தாகத்தை
Sunday, May 31, 2009
காற்று படித்த கதை
அம்மா கூப்பிட
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தை
அப்படியே வைத்துவிட்டு
கதையிலிருந்து வெளியேறும்
கதாபாத்திரத்தைப் போல
ஓடுகிறாள் அவள்
மீதிக் கதையை
புரட்டி புரட்டி
படித்துக் கொண்டிருக்கிறது
காற்று
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தை
அப்படியே வைத்துவிட்டு
கதையிலிருந்து வெளியேறும்
கதாபாத்திரத்தைப் போல
ஓடுகிறாள் அவள்
மீதிக் கதையை
புரட்டி புரட்டி
படித்துக் கொண்டிருக்கிறது
காற்று
தனிமையின் போதை
இந்த மதுக்கடையின்
சத்தம் குவிந்த
மையப்பகுதியில்
நானும்
என் தனிமையும்
ஏழாவது மதுச்சுற்றில்
எட்டு ஒன்பது என
சுற்றுகள் கூடுகின்றன
இடையிடையே
பரிமாறும் சிறுவன்
வியர்வையைத் துடைத்தபடி
புன்னகைத்துப் போகிறான்
அவன் முகநகை
ஒரு புண்ணிய
நிகழ்வாகத் தெரிகிறது
தனிமைக்கு
போதை பற்றாமல் போக
குடிக்கத் தொடங்குகிறது
என்னை
சத்தம் குவிந்த
மையப்பகுதியில்
நானும்
என் தனிமையும்
ஏழாவது மதுச்சுற்றில்
எட்டு ஒன்பது என
சுற்றுகள் கூடுகின்றன
இடையிடையே
பரிமாறும் சிறுவன்
வியர்வையைத் துடைத்தபடி
புன்னகைத்துப் போகிறான்
அவன் முகநகை
ஒரு புண்ணிய
நிகழ்வாகத் தெரிகிறது
தனிமைக்கு
போதை பற்றாமல் போக
குடிக்கத் தொடங்குகிறது
என்னை
Wednesday, May 27, 2009
குழந்தையின் மழை
குடைகீழ்
அம்மாவுடன்
சேர்ந்து போகிறது குழந்தை
அடிக்கடி வெளியேறி
குதித்து ஆடி
நனைகிறது
அம்மா சத்தம் போட்டுக்
கூப்பிடும் போதெல்லாம்
குடைக்குள் வந்து சேர்கிறது
கொஞ்சம் மழை
குழந்தையுடன்
அம்மாவுடன்
சேர்ந்து போகிறது குழந்தை
அடிக்கடி வெளியேறி
குதித்து ஆடி
நனைகிறது
அம்மா சத்தம் போட்டுக்
கூப்பிடும் போதெல்லாம்
குடைக்குள் வந்து சேர்கிறது
கொஞ்சம் மழை
குழந்தையுடன்
ஒரு கவிதையில்
மணல் பற்றி
எனக்குச் சொன்ன நண்டும்
கடல் பற்றிச்
சொன்ன மீனும்
சந்தித்துக் கொண்டன
நான் எழுதிய
ஒரு கவிதையில்
வார்த்தைகளில்
மணல் ஒட்டிக்கிடப்பதைப்
பார்த்ததாகச் சொன்னது நண்டு
கவிதையில்
உப்புக் கரிப்பதாகச்
சொன்னது மீன்
எனக்குச் சொன்ன நண்டும்
கடல் பற்றிச்
சொன்ன மீனும்
சந்தித்துக் கொண்டன
நான் எழுதிய
ஒரு கவிதையில்
வார்த்தைகளில்
மணல் ஒட்டிக்கிடப்பதைப்
பார்த்ததாகச் சொன்னது நண்டு
கவிதையில்
உப்புக் கரிப்பதாகச்
சொன்னது மீன்
Monday, May 18, 2009
கம்பிமேல்...
கம்பிமேல் நடந்து
வித்தை காட்டும் சிறுமியை
ஐஸ் கிரீம் சுவைத்தபடி
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு சிறுமி
வித்தை காட்டும் சிறுமியை
ஐஸ் கிரீம் சுவைத்தபடி
வேடிக்கை பார்க்கும்
இன்னொரு சிறுமி
அன்பான அணில்
அடிக்கடி
மொட்டை மாடியில்
தென்படும் அணிலுக்கு
பெயர் வைத்தேன்
பெயர் சொல்லிக்
கூப்பிட்டுப் பார்த்தேன்
வரவில்லை
பல நாள்
அணிலுடன்
என் சிநேகத்தைப்
பகிர்ந்து கொண்டேன்
என் கண்களின் வாஞ்சையைப்
பார்த்தபடி ஓடியது
மீண்டும் கூப்பிட்டேன்
வேகமாக வந்த அணில்
பெயரில் இருந்த
அன்பைச் சுவைத்து விட்டு
ஓடிப்போனது
மொட்டை மாடியில்
தென்படும் அணிலுக்கு
பெயர் வைத்தேன்
பெயர் சொல்லிக்
கூப்பிட்டுப் பார்த்தேன்
வரவில்லை
பல நாள்
அணிலுடன்
என் சிநேகத்தைப்
பகிர்ந்து கொண்டேன்
என் கண்களின் வாஞ்சையைப்
பார்த்தபடி ஓடியது
மீண்டும் கூப்பிட்டேன்
வேகமாக வந்த அணில்
பெயரில் இருந்த
அன்பைச் சுவைத்து விட்டு
ஓடிப்போனது
Thursday, May 14, 2009
இப்படித்தான்…
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு விபத்தில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு சொல்லில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு தற்கொலையில்
இப்படித்தான்
நான் இறந்து போனேன்
ஒரு பார்வையில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு துரோகத்தில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு மழைத்துளியில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு கண்ணீர் உளியில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு புன்னகையில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு தருணத்தில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு கவிதையில்
நான் இறந்துபோனேன்
ஒரு விபத்தில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு சொல்லில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு தற்கொலையில்
இப்படித்தான்
நான் இறந்து போனேன்
ஒரு பார்வையில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு துரோகத்தில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு மழைத்துளியில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு கண்ணீர் உளியில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு புன்னகையில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு தருணத்தில்
இப்படித்தான்
நான் இறந்துபோனேன்
ஒரு கவிதையில்
சைக்கிள் சிறுமி
சைக்கிள் ஓட்டக்
கற்றுக் கொண்டதை
அபிநயத்தோடு தோழியிடம்
சொல்லிக் காட்டினாள் சிறுமி
நான் பயத்தை மிதித்து
ஓட்டியபோது
அப்பா கூடவே பிடித்து
ஓடி வந்தார்
பெடலை மிதித்து
ஓட்டியபோது
அப்பா ஓரமாய் நின்று
பார்த்து ரசித்தார்
கற்றுக் கொண்டதை
அபிநயத்தோடு தோழியிடம்
சொல்லிக் காட்டினாள் சிறுமி
நான் பயத்தை மிதித்து
ஓட்டியபோது
அப்பா கூடவே பிடித்து
ஓடி வந்தார்
பெடலை மிதித்து
ஓட்டியபோது
அப்பா ஓரமாய் நின்று
பார்த்து ரசித்தார்
Thursday, May 07, 2009
வாழ்வெனும் தீவு
எங்கள் குருதியில்
கால் நனைத்து
நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்
உங்கள் மரணத்தை நோக்கி
கால் நனைத்து
நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்
உங்கள் மரணத்தை நோக்கி
Wednesday, April 29, 2009
பறந்த காகிதம்
எழுதிய காகிதம்
காற்றில் பறந்து
பூந்தொட்டி அருகில்
விழுந்தது
கவனித்துப் பார்க்க
பூந்தொட்டியில்
சிதறிக் கிடந்தன
வார்த்தைகள்
கவிதையில்
உதிர்ந்து இருந்தன
பூக்கள்
காற்றில் பறந்து
பூந்தொட்டி அருகில்
விழுந்தது
கவனித்துப் பார்க்க
பூந்தொட்டியில்
சிதறிக் கிடந்தன
வார்த்தைகள்
கவிதையில்
உதிர்ந்து இருந்தன
பூக்கள்
Saturday, April 25, 2009
ஊஞ்சல் பிம்பங்கள்
ஊஞ்சலில் ஆடியது
பனித்துளி
பிறகு ஆடியது
வானவில்
அடுத்து ஊஞ்சலை
அழகாக்கியது
மழைத்துளி
கண் இமைத்துப் பார்க்க
ஊஞ்சலில்
சிறகசைத்து
ஒரு பறவை
ஆடிய
இசை அசைவில்
மாறிக் கொண்டே வந்த
ஊஞ்சல் குழந்தை
ஆடிக்கொண்டிருந்தது
அம்மாவின்
சந்தோஷத்திலும்
பனித்துளி
பிறகு ஆடியது
வானவில்
அடுத்து ஊஞ்சலை
அழகாக்கியது
மழைத்துளி
கண் இமைத்துப் பார்க்க
ஊஞ்சலில்
சிறகசைத்து
ஒரு பறவை
ஆடிய
இசை அசைவில்
மாறிக் கொண்டே வந்த
ஊஞ்சல் குழந்தை
ஆடிக்கொண்டிருந்தது
அம்மாவின்
சந்தோஷத்திலும்
கனவுகளுக்கு அப்பால்...
கனவுகளுக்கு அப்பால்
என்ன இருக்கிறது
பிசுபிசுக்கும் இரவும்
பிரிக்க முடியாத இருளும்
என்ன இருக்கிறது
பிசுபிசுக்கும் இரவும்
பிரிக்க முடியாத இருளும்
Wednesday, April 22, 2009
Tuesday, April 21, 2009
Monday, April 20, 2009
யாருக்கும் தெரியாமல்
ஒப்பனை இல்லாமல்
நடித்து முடித்ததற்காக
கைதட்டல் பெற்றவர்
தனியே போய்
வார்த்தைகளுக்குப் பூசப்பட்டிருந்த
சாயத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்
யாருக்கும் தெரியாமல்
நடித்து முடித்ததற்காக
கைதட்டல் பெற்றவர்
தனியே போய்
வார்த்தைகளுக்குப் பூசப்பட்டிருந்த
சாயத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்
யாருக்கும் தெரியாமல்
பொய்கள்
பல விதமான பொய்கள்
இருக்கின்றன
எந்த விதமான பொய்கள்
வேண்டும் உங்களுக்கு
உண்மைபோல் தெரியும்
பொய்கள் நிறையவும்
மற்ற பொய்கள்
கொஞ்சமும்
இருக்கின்றன
எந்த விதமான பொய்கள்
வேண்டும் உங்களுக்கு
உண்மைபோல் தெரியும்
பொய்கள் நிறையவும்
மற்ற பொய்கள்
கொஞ்சமும்
Wednesday, April 15, 2009
பேசும் மரம்
முதலில் மரம் பேசியது
பிறகு இலைகள் பேசின
கிளை விழுது வேர் என
ஒவ்வொன்றும் பேசியதை
அவன் கேட்டான்
இலைகளுக்கிடையே
இமை அசைத்த
ஒளிகற்றையின் மெளனமும்
காற்றோடு சேர்ந்து
அவனைத் தடவியது
விரிந்து கிடந்த
மரத்தின் நிழலில்
சாய்த்து வைக்கப்பட்டிருந்த
கோடாலியிடம் விசாரித்தான்
மரம் பேசியது
உனக்குக் கேட்டதா
ஊமை நாவோடு
பார்த்தது கோடாலி
தன்னை சமாதானம்
செய்து கொண்டு
கோடாலியை ஓங்கினான்
வெயிலைக் கிழித்து
பாம்பாய் சீறி
மரத்தைக் கொத்தியது
ஒவ்வொன்றாய்
உதிர்ந்து கொண்டே
வந்தன வார்த்தைகள்
கடைசி வரை
வார்த்தைகளில்
கசிந்த ரத்தத்தை அவன்
பார்க்கவே இல்லை
பிறகு இலைகள் பேசின
கிளை விழுது வேர் என
ஒவ்வொன்றும் பேசியதை
அவன் கேட்டான்
இலைகளுக்கிடையே
இமை அசைத்த
ஒளிகற்றையின் மெளனமும்
காற்றோடு சேர்ந்து
அவனைத் தடவியது
விரிந்து கிடந்த
மரத்தின் நிழலில்
சாய்த்து வைக்கப்பட்டிருந்த
கோடாலியிடம் விசாரித்தான்
மரம் பேசியது
உனக்குக் கேட்டதா
ஊமை நாவோடு
பார்த்தது கோடாலி
தன்னை சமாதானம்
செய்து கொண்டு
கோடாலியை ஓங்கினான்
வெயிலைக் கிழித்து
பாம்பாய் சீறி
மரத்தைக் கொத்தியது
ஒவ்வொன்றாய்
உதிர்ந்து கொண்டே
வந்தன வார்த்தைகள்
கடைசி வரை
வார்த்தைகளில்
கசிந்த ரத்தத்தை அவன்
பார்க்கவே இல்லை
Tuesday, April 14, 2009
புல்லாங்குழல் வாசிப்பவன்
பசிக்காக
காசுகள் வேண்டி
புல்லாங்குழல் வாசிப்பவன்
இடையிடையே
தன் பசிக்கும்
கொஞ்சம்
இசைப் போட்டபடி
காசுகள் வேண்டி
புல்லாங்குழல் வாசிப்பவன்
இடையிடையே
தன் பசிக்கும்
கொஞ்சம்
இசைப் போட்டபடி
ஓடும் பேருந்தில்...
ஓடும் பேருந்தில்
பக்கத்து இருக்கையில்
அமர்ந்திருந்தவர்
எழுதிய கவிதையைப்
படிக்கச் சொன்னார்
நன்றியோடு வாங்கிப்
படிக்கும் போது
காற்று இழுக்க
விரல்களிலிருந்து விடுபட்டு
வெளியேப் போனது
பதற்றத்துடன் பார்க்க
அமைதிப் படுத்தினார்
என்னால் பறந்து போனதே
உங்கள் கவிதை என்றபோது
பறந்து போனது
காகிதம்தான் கவிதையல்லா
எனச் சொல்லி சிரித்தார்
ஒரு கவிதையைப் போல
பக்கத்து இருக்கையில்
அமர்ந்திருந்தவர்
எழுதிய கவிதையைப்
படிக்கச் சொன்னார்
நன்றியோடு வாங்கிப்
படிக்கும் போது
காற்று இழுக்க
விரல்களிலிருந்து விடுபட்டு
வெளியேப் போனது
பதற்றத்துடன் பார்க்க
அமைதிப் படுத்தினார்
என்னால் பறந்து போனதே
உங்கள் கவிதை என்றபோது
பறந்து போனது
காகிதம்தான் கவிதையல்லா
எனச் சொல்லி சிரித்தார்
ஒரு கவிதையைப் போல
Saturday, April 11, 2009
குழந்தையின் மொழி
நேரம் கடந்து வந்ததற்காக
தூங்கிய குழந்தையை
மடியில் வைத்து
பார்வையிலேயே
மன்னிப்பு கேட்கிறார் அப்பா
ஏம்பா லேட்டா வந்தீங்க
தூக்கத்திலேயே
கேட்கிறது குழந்தை
தூங்கிய குழந்தையை
மடியில் வைத்து
பார்வையிலேயே
மன்னிப்பு கேட்கிறார் அப்பா
ஏம்பா லேட்டா வந்தீங்க
தூக்கத்திலேயே
கேட்கிறது குழந்தை
Friday, April 10, 2009
இரவுக் காவலாளி
யாராவது வந்தால்
எழுப்பு
தன் தூக்கத்திடம்
சொல்லிவிட்டு
உறங்கப் பார்க்கிறார்
இரவுக் காவலாளி
எழுப்பு
தன் தூக்கத்திடம்
சொல்லிவிட்டு
உறங்கப் பார்க்கிறார்
இரவுக் காவலாளி
பயணம்
இரவுப் பயணம்
காலையில் பேருந்திலிருந்து
இறங்கியபோது
புன்னகை மாறாமல்
ஓட்டுனர் கேட்டார்
நல்லாத் தூங்கனீங்களா சார்
காலையில் பேருந்திலிருந்து
இறங்கியபோது
புன்னகை மாறாமல்
ஓட்டுனர் கேட்டார்
நல்லாத் தூங்கனீங்களா சார்
Saturday, April 04, 2009
Friday, April 03, 2009
குற்றவாளிகள்
குற்றவாளிகள் எல்லோரும்
தப்பி ஓடினார்கள்
வேகமாக விரட்டி வந்தும்
நம்மால் பிடிக்க
இயலவில்லை
கூடி நின்றவர்கள்
நம் முயற்சிகளுக்காக
பாராட்டி கைதட்டினார்கள்
குற்றவாளிகள்
ஓடிய திசையில்
புகை மூட்டம்
இறங்கிக் கொண்டிருந்தது
அடுத்த முறை
விட்டு விடாதீர்கள் என்று
வாழ்த்துக்களை வழங்கியபடி
பிரிந்து போனார்கள்
எனக்குள் ஒன்றும்
உனக்குள் ஒன்றுமாக
இரண்டு குற்றவாளிகள்
பதுங்கிப் போனதை
உணராத அவர்கள்
தப்பி ஓடினார்கள்
வேகமாக விரட்டி வந்தும்
நம்மால் பிடிக்க
இயலவில்லை
கூடி நின்றவர்கள்
நம் முயற்சிகளுக்காக
பாராட்டி கைதட்டினார்கள்
குற்றவாளிகள்
ஓடிய திசையில்
புகை மூட்டம்
இறங்கிக் கொண்டிருந்தது
அடுத்த முறை
விட்டு விடாதீர்கள் என்று
வாழ்த்துக்களை வழங்கியபடி
பிரிந்து போனார்கள்
எனக்குள் ஒன்றும்
உனக்குள் ஒன்றுமாக
இரண்டு குற்றவாளிகள்
பதுங்கிப் போனதை
உணராத அவர்கள்
குழந்தையின் கடல்
நள்ளிரவில் எழுந்து
கடல் பார்க்க வேண்டும் என்று
அடம் பிடித்த
குழந்தையை
சமாதானப்படுத்தி
நாளை போகலாம்
எனச் சொல்லி
தூங்க வைக்க
பெரும்பாடாயிற்று
பின் விடியும் வரை
அலைகள் எழுப்பி
தூங்க விடாமல்
செய்தது
குழந்தையின் கடல்
கடல் பார்க்க வேண்டும் என்று
அடம் பிடித்த
குழந்தையை
சமாதானப்படுத்தி
நாளை போகலாம்
எனச் சொல்லி
தூங்க வைக்க
பெரும்பாடாயிற்று
பின் விடியும் வரை
அலைகள் எழுப்பி
தூங்க விடாமல்
செய்தது
குழந்தையின் கடல்
Tuesday, March 17, 2009
வண்ணங்களின் நறுமணம்
ஓவிய அரங்கம்
நேரம் முடிந்து
மூடப்படுகிறது
பார்வையாளர்கள்
வெளி வருகின்றனர்
சிலர் கண்களில்
வண்ணம்
ஒட்டி இருக்கிறது
நிசப்த இரவில்
நிறங்கள்
ஆறாகப் பெருகி
அரங்கம் எங்கும்
வழிந்தோடுகிறது
நான்காவது ஓவியப் பெண்
ஓடி வந்து
ஏழாவது ஓவியத்திலிருக்கும்
பெரியவரை
நலம் விசாரிக்கிறாள்
மூன்றாம் ஓவியத்திலிருக்கும்
மஞ்சள் பூக்களை
இரண்டாவது ஓவியத்தின் குழந்தை
கை நீட்டிப்
பறித்து எறிகிறது
வண்ணங்களில்
விளையாடிப் போகின்றன
பூக்கள்
ஏழாவது ஓவியத்தில்
வராமல் பயந்தபடி
பார்க்கும் பூனையைத்
தூக்கி வருகிறாள்
ஒரு தாய்
அவள் கைகளை
நக்குகிறது பூனை
அன்பின் வண்ணங்கள் மின்ன
பசிக்கும் குழந்தை
நீலத்தை சாப்பிட்டு
பச்சை நீரைக் குடிக்கிறது
அடுத்த நாள் ஞாயிறு
விடுமுறை குதூகலத்தில்
எல்லோரும்
திங்களன்று
பார்வையாளர்கள் வருகைக்காக
கதவைத் திறக்கும் காவலாளி
காலடியில் தட்டுப்படும்
மஞ்சள் பூவை எடுத்து
மெல்ல முகர்ந்தபடி
ஓவியங்களைப் பார்க்கிறான்
வண்ணங்களின் நறுமணம்
அவனுள்
பரவத் தொடங்குகிறது
(ஆனந்த விகடன்,27.05.08 இதழில்
விடுமுறை வண்ணங்கள் என்ற தலைப்பில்
பிரசுரமானது)
நேரம் முடிந்து
மூடப்படுகிறது
பார்வையாளர்கள்
வெளி வருகின்றனர்
சிலர் கண்களில்
வண்ணம்
ஒட்டி இருக்கிறது
நிசப்த இரவில்
நிறங்கள்
ஆறாகப் பெருகி
அரங்கம் எங்கும்
வழிந்தோடுகிறது
நான்காவது ஓவியப் பெண்
ஓடி வந்து
ஏழாவது ஓவியத்திலிருக்கும்
பெரியவரை
நலம் விசாரிக்கிறாள்
மூன்றாம் ஓவியத்திலிருக்கும்
மஞ்சள் பூக்களை
இரண்டாவது ஓவியத்தின் குழந்தை
கை நீட்டிப்
பறித்து எறிகிறது
வண்ணங்களில்
விளையாடிப் போகின்றன
பூக்கள்
ஏழாவது ஓவியத்தில்
வராமல் பயந்தபடி
பார்க்கும் பூனையைத்
தூக்கி வருகிறாள்
ஒரு தாய்
அவள் கைகளை
நக்குகிறது பூனை
அன்பின் வண்ணங்கள் மின்ன
பசிக்கும் குழந்தை
நீலத்தை சாப்பிட்டு
பச்சை நீரைக் குடிக்கிறது
அடுத்த நாள் ஞாயிறு
விடுமுறை குதூகலத்தில்
எல்லோரும்
திங்களன்று
பார்வையாளர்கள் வருகைக்காக
கதவைத் திறக்கும் காவலாளி
காலடியில் தட்டுப்படும்
மஞ்சள் பூவை எடுத்து
மெல்ல முகர்ந்தபடி
ஓவியங்களைப் பார்க்கிறான்
வண்ணங்களின் நறுமணம்
அவனுள்
பரவத் தொடங்குகிறது
(ஆனந்த விகடன்,27.05.08 இதழில்
விடுமுறை வண்ணங்கள் என்ற தலைப்பில்
பிரசுரமானது)
Saturday, March 14, 2009
இரவல் சிறகுகள்
சிலையாகவும்
சிலை மீது
அமர்ந்திருக்கும்
பறவையாகவும் இருந்தேன்
ஒரு மாய கணத்தில்
இரவல் சிறகுகள் பெற்று
பறந்து போனது சிலை
பறவை சிலையாக
இப்போது நான்
தொலைவில் புள்ளியான
பறவையைப் பார்த்தபடி
பறக்க முடியாமல்
சிலைக்குள்
இருந்தபடி
சிலை மீது
அமர்ந்திருக்கும்
பறவையாகவும் இருந்தேன்
ஒரு மாய கணத்தில்
இரவல் சிறகுகள் பெற்று
பறந்து போனது சிலை
பறவை சிலையாக
இப்போது நான்
தொலைவில் புள்ளியான
பறவையைப் பார்த்தபடி
பறக்க முடியாமல்
சிலைக்குள்
இருந்தபடி
நேத்ராவின் மீன்குட்டிகள்
புதிதாய் இடம் பிடித்தது
மீன் தொட்டி
குதிக்கிறாள் நேத்ரா
தன் குட்டி விரல்களால்
தொட்டுப் பார்க்கிறாள்
அவள் கண்களைப் போல்
அசைகின்றன மீன்குட்டிகள்
ஒவ்வொரு மீனுக்கும்
ஒரு பெயரை வைத்துக்
கூப்பிடுகிறாள்
கூப்பிடும் போதெல்லாம்
ஓடி வருகின்றன மீன்கள்
கைதட்டி எல்லோரையும்
அழைத்துக் காட்டுகிறாள்
மீன்குஞ்சுகள்
ஓய்வெடுக்கும் சமயங்களில்
அவள் வைத்த பெயர்கள்
நீந்துவதைப் பார்க்க முடிகிறது
மீன் தொட்டி
குதிக்கிறாள் நேத்ரா
தன் குட்டி விரல்களால்
தொட்டுப் பார்க்கிறாள்
அவள் கண்களைப் போல்
அசைகின்றன மீன்குட்டிகள்
ஒவ்வொரு மீனுக்கும்
ஒரு பெயரை வைத்துக்
கூப்பிடுகிறாள்
கூப்பிடும் போதெல்லாம்
ஓடி வருகின்றன மீன்கள்
கைதட்டி எல்லோரையும்
அழைத்துக் காட்டுகிறாள்
மீன்குஞ்சுகள்
ஓய்வெடுக்கும் சமயங்களில்
அவள் வைத்த பெயர்கள்
நீந்துவதைப் பார்க்க முடிகிறது
Thursday, March 12, 2009
கால வெளியில்
நள்ளிரவில்
கனவின் மீது
ஒரு அபூர்வ நட்சத்திரத்தின்
ஒளி கடந்து போனது
கனவும் ஒளியும்
சந்தித்த தருணத்தில்
மிதந்து கொண்டிருந்தேன்
எதுவுமற்ற
கால வெளியில்
கனவின் மீது
ஒரு அபூர்வ நட்சத்திரத்தின்
ஒளி கடந்து போனது
கனவும் ஒளியும்
சந்தித்த தருணத்தில்
மிதந்து கொண்டிருந்தேன்
எதுவுமற்ற
கால வெளியில்
Monday, March 09, 2009
அப்பாவின் சைக்கிள்
பல பயணக் கதைகளையும்
பல நூறு மைல்களையும்
தன்னுள் புதைத்து
வைத்திருக்கிறது
அப்பாவின் சைக்கிள்
ஓட்டும் போதெல்லாம்
ஒன்றிரண்டை சொல்வதுண்டு
என்னிடம்
பல நூறு மைல்களையும்
தன்னுள் புதைத்து
வைத்திருக்கிறது
அப்பாவின் சைக்கிள்
ஓட்டும் போதெல்லாம்
ஒன்றிரண்டை சொல்வதுண்டு
என்னிடம்
Sunday, March 08, 2009
தொலைந்து போதல்
கூட்டங்களில்
தொலைந்து போவது
பிடித்திருக்கிறது
அனுபவ நெரிசல்களோடு
திரும்ப வந்து சேர்ந்து
தனித்து நடக்கையில்
கூட்டம் தொலைந்து போவதும்
பிடித்திருக்கிறது
தொலைந்து போவது
பிடித்திருக்கிறது
அனுபவ நெரிசல்களோடு
திரும்ப வந்து சேர்ந்து
தனித்து நடக்கையில்
கூட்டம் தொலைந்து போவதும்
பிடித்திருக்கிறது
Sunday, March 01, 2009
குழந்தை,பட்டாம் பூச்சி மற்றும் நான்
தூங்கிக் கொண்டிருக்கும்
குழந்தை மேல்
சுற்றுகிறது பட்டாம் பூச்சி
ரசிக்க முடிகிறது இரண்டையும்
பட்டாம் பூச்சி போல்
என்னால்
குழந்தையை ரசிக்க முடியுமா
தெரியவில்லை
குழந்தை மேல்
சுற்றுகிறது பட்டாம் பூச்சி
ரசிக்க முடிகிறது இரண்டையும்
பட்டாம் பூச்சி போல்
என்னால்
குழந்தையை ரசிக்க முடியுமா
தெரியவில்லை
வார்த்தைகளின் நடனம்
எவ்வளவோ கூப்பிட்டும்
வந்து சேராமல்
நனைகின்றன
சில வார்த்தைகள்
பூர்த்தியாகாதக் கவிதை
ரசிக்கிறது
மழையோடு சேர்ந்து
வார்த்தைகளின்
நடனத்தையும்
வந்து சேராமல்
நனைகின்றன
சில வார்த்தைகள்
பூர்த்தியாகாதக் கவிதை
ரசிக்கிறது
மழையோடு சேர்ந்து
வார்த்தைகளின்
நடனத்தையும்
Friday, February 27, 2009
யாரோ ஒருவர்
விலாசத்தைக் காட்டி
விசாரித்த போது
நிதானமாகப் பார்த்தார்
பொறுமையாகச் சொன்னார்
புரிந்து கொண்டது
முகத்தில் தெரிந்தவுடன்
புன்னகைத்தபடியே போனார்
நகரத்தில்
தன் விலாசத்தைத் தொலைக்காத
யாரோ ஒருவர்
விசாரித்த போது
நிதானமாகப் பார்த்தார்
பொறுமையாகச் சொன்னார்
புரிந்து கொண்டது
முகத்தில் தெரிந்தவுடன்
புன்னகைத்தபடியே போனார்
நகரத்தில்
தன் விலாசத்தைத் தொலைக்காத
யாரோ ஒருவர்
Sunday, February 22, 2009
வெள்ளை நிறத்தில் ஒரு பூனை
யாரும்
பார்க்காத நேரம்
பூங்காவின் ஓரத்தில்
இறக்கி விடுகிறேன்
வெள்ளை நிறப்
பூனையை
கை நழுவும் போது
ஒரு கணம்
அதன் கண்களைப்
பார்க்கிறேன்
நெருக்கடி நிறைந்த வீட்டில்
இருக்கக் கூடாது
என்று எதிர்ப்பு கிளம்பியதால்
இந்த ஏற்பாடு
கூப்பிட்டால்
போய் விடலாம் என்ற
நம்பிக்கையில்
குழந்தைகளின் விளையாட்டை
கவனிக்கிறது பூனை
நெடுந்தூரம்
வந்த பின்னும்
என்னைச் சுற்றி சுற்றி
வருகிறது
பூனைக்கு
நான் வைத்த பெயர்
பார்க்காத நேரம்
பூங்காவின் ஓரத்தில்
இறக்கி விடுகிறேன்
வெள்ளை நிறப்
பூனையை
கை நழுவும் போது
ஒரு கணம்
அதன் கண்களைப்
பார்க்கிறேன்
நெருக்கடி நிறைந்த வீட்டில்
இருக்கக் கூடாது
என்று எதிர்ப்பு கிளம்பியதால்
இந்த ஏற்பாடு
கூப்பிட்டால்
போய் விடலாம் என்ற
நம்பிக்கையில்
குழந்தைகளின் விளையாட்டை
கவனிக்கிறது பூனை
நெடுந்தூரம்
வந்த பின்னும்
என்னைச் சுற்றி சுற்றி
வருகிறது
பூனைக்கு
நான் வைத்த பெயர்
ஒரு அஞ்சலி
இறந்த போது
எவ்வளவோ பேர் வந்து
கண்ணீர் சிந்தினார்கள்
இருந்த போது
ஒருவரும் வந்து
கண்ணீர் துடைக்கவில்லை
எவ்வளவோ பேர் வந்து
கண்ணீர் சிந்தினார்கள்
இருந்த போது
ஒருவரும் வந்து
கண்ணீர் துடைக்கவில்லை
Tuesday, February 17, 2009
நமது மழை
எல்லோரையும் முடக்கிப்
போட்டிருந்தது மழை
நான் திட்டிக்கொண்டிருந்தேன்
எப்போதும் மழையைக்
குழந்தை போல ரசிக்கும்
பக்கத்து வீட்டு அக்காவுக்கு
பிரசவ வலி வர
அவசரமாய் ஆட்டோவில்
ஏற்றிக் கொண்டு போனார்கள்
தலை பிரசவம் என்பதால்
பதற்றம் கூடி இருந்தது
மழை நிற்காத காலையில்
செய்தி வந்தது
சுக பிரசவம்
ஆண் குழந்தை என்று
அப்போது பார்த்த மழையை
உள்ளபடியே
ரசிக்கத் தோன்றியது
போட்டிருந்தது மழை
நான் திட்டிக்கொண்டிருந்தேன்
எப்போதும் மழையைக்
குழந்தை போல ரசிக்கும்
பக்கத்து வீட்டு அக்காவுக்கு
பிரசவ வலி வர
அவசரமாய் ஆட்டோவில்
ஏற்றிக் கொண்டு போனார்கள்
தலை பிரசவம் என்பதால்
பதற்றம் கூடி இருந்தது
மழை நிற்காத காலையில்
செய்தி வந்தது
சுக பிரசவம்
ஆண் குழந்தை என்று
அப்போது பார்த்த மழையை
உள்ளபடியே
ரசிக்கத் தோன்றியது
நினைவுகளின் தாய்
எங்கள் குழந்தைப் பருவம்
இன்னமும் இருக்கிறது
அம்மாவிடம்
ஊர் போகும்
ஒவ்வொரு முறையும்
தன் நினைவுகளில் பிசைந்து
ஊட்டத் தவறியதே இல்லை
இன்னமும் இருக்கிறது
அம்மாவிடம்
ஊர் போகும்
ஒவ்வொரு முறையும்
தன் நினைவுகளில் பிசைந்து
ஊட்டத் தவறியதே இல்லை
Sunday, February 15, 2009
இடுப்பிலிருக்கும் குழந்தை
முண்டியத்து
முன்னேறி
இடம் பிடித்து
அமர்ந்து
வெற்றி பெருமூச்சு விட்டு
பின் பார்க்க
ஏற முடியாமல்
திணறி
வெளியேறி
வெயில் கவ்வ
தள்ளி நிற்கும் தாயின்
இடுப்பிலிருக்கும் குழந்தை
சிரித்தபடியே
கையசைத்துக் கொண்டிருந்தது
என்னைப் பார்த்து
முன்னேறி
இடம் பிடித்து
அமர்ந்து
வெற்றி பெருமூச்சு விட்டு
பின் பார்க்க
ஏற முடியாமல்
திணறி
வெளியேறி
வெயில் கவ்வ
தள்ளி நிற்கும் தாயின்
இடுப்பிலிருக்கும் குழந்தை
சிரித்தபடியே
கையசைத்துக் கொண்டிருந்தது
என்னைப் பார்த்து
என்னிடம்...
என்னிடம் இருக்கின்றன
பதினேழு கவிதைகளும்
இருபது மதுக்கோப்பைகளும்
நீங்கள் விரும்பினால்
அருந்தலாம்
கவிதையிலிருந்து மதுவும்
படிக்கலாம்
மதுவிலிருந்து கவிதையும்
பதினேழு கவிதைகளும்
இருபது மதுக்கோப்பைகளும்
நீங்கள் விரும்பினால்
அருந்தலாம்
கவிதையிலிருந்து மதுவும்
படிக்கலாம்
மதுவிலிருந்து கவிதையும்
Thursday, February 12, 2009
பேச நினைத்தவை
நீங்கள் பேசாமல் போனால்
உங்களிடம் நான் பேச
நினைத்தவை எல்லாம்
வார்த்தைகளின் சீழாக
என் காதுகளில்
வடியும் என
பரிதாபமாக சொல்லியவனைப்
பார்த்தபடி இருந்தேன்
அவன் சொன்னதுபோல்
வார்த்தைகளின் சீழ் வடிந்தது
என் காதுகளிலிருந்து
உங்களிடம் நான் பேச
நினைத்தவை எல்லாம்
வார்த்தைகளின் சீழாக
என் காதுகளில்
வடியும் என
பரிதாபமாக சொல்லியவனைப்
பார்த்தபடி இருந்தேன்
அவன் சொன்னதுபோல்
வார்த்தைகளின் சீழ் வடிந்தது
என் காதுகளிலிருந்து
Monday, February 09, 2009
எழுதிய என்னாலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை...
காலையை வணங்கினான்
சில உடற்பயிற்சிகள் செய்தான்
அவசர குளியல்
ஏதோ திருப்தி தந்தது
தேநீர் நட்பானது
நடந்தான்
பள்ளிக் குழந்தைகளுக்கு
கையசைத்தான்
ஒரு பாட்டி
அவன் கை பிடித்து
சாலைக் கடந்தாள்
கடந்து போய்
திரும்பி வந்து
கடவுளைக் கும்பிட்டான்
மனதிலிருந்த திட்டத்தில்
மாற்றமில்லை
நண்பனுக்கு
கடிதம் எழுதினான்
சம்பளம் வாங்கி
ஊருக்கு அனுப்பினான்
சில நிராகரிப்புகளை
நினைத்துப் பார்த்தான்
அதற்காக வருத்தப்படவில்லை
புன்னகை நிறைந்த தருணங்களுக்கு
நன்றி சொன்னான்
கால் நனைத்த
அலையைத் தொட்டான்
தொட நினைத்த அலை
போயிருந்தது
சாதகமான உயரத்திலிருந்த
மின்விசிறியை நிறுத்தினான்
அவனை வழி அனுப்புவதுபோல்
மெதுவாகி
நின்றன இறக்கைகள்
முன்பாக ஒரு
கணம் யோசித்தான்
இதை முதலில் செய்திருந்தால்
இன்றைய இவ்வளவு
நிகழ்வுகளை
இழந்திருப்போமே என்று
ஹாலில் நிறுத்தப்படாத டீவி
ஈழத்தமிழர்களின் இறப்புகளைச்
சொல்லிக் கொண்டிருக்க
அவன் கைபேசி
ஒலித்துக் கொண்டே இருந்தது
சில உடற்பயிற்சிகள் செய்தான்
அவசர குளியல்
ஏதோ திருப்தி தந்தது
தேநீர் நட்பானது
நடந்தான்
பள்ளிக் குழந்தைகளுக்கு
கையசைத்தான்
ஒரு பாட்டி
அவன் கை பிடித்து
சாலைக் கடந்தாள்
கடந்து போய்
திரும்பி வந்து
கடவுளைக் கும்பிட்டான்
மனதிலிருந்த திட்டத்தில்
மாற்றமில்லை
நண்பனுக்கு
கடிதம் எழுதினான்
சம்பளம் வாங்கி
ஊருக்கு அனுப்பினான்
சில நிராகரிப்புகளை
நினைத்துப் பார்த்தான்
அதற்காக வருத்தப்படவில்லை
புன்னகை நிறைந்த தருணங்களுக்கு
நன்றி சொன்னான்
கால் நனைத்த
அலையைத் தொட்டான்
தொட நினைத்த அலை
போயிருந்தது
சாதகமான உயரத்திலிருந்த
மின்விசிறியை நிறுத்தினான்
அவனை வழி அனுப்புவதுபோல்
மெதுவாகி
நின்றன இறக்கைகள்
முன்பாக ஒரு
கணம் யோசித்தான்
இதை முதலில் செய்திருந்தால்
இன்றைய இவ்வளவு
நிகழ்வுகளை
இழந்திருப்போமே என்று
ஹாலில் நிறுத்தப்படாத டீவி
ஈழத்தமிழர்களின் இறப்புகளைச்
சொல்லிக் கொண்டிருக்க
அவன் கைபேசி
ஒலித்துக் கொண்டே இருந்தது
Sunday, February 08, 2009
இருவரும்
ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்து கொள்ளலாமா என
கேட்கும் பெண்ணுக்கு
இடம் கொடுத்து
மாறி அமர்ந்தேன்
பயணம் முடியும் வரை
பேசிக்கொள்ளவில்லை
இருவரும்
ஆனாலும் பழக்கமாயின
அவளுக்கு இயற்கையும்
எனக்கு அவள் ரசனையும்
அமர்ந்து கொள்ளலாமா என
கேட்கும் பெண்ணுக்கு
இடம் கொடுத்து
மாறி அமர்ந்தேன்
பயணம் முடியும் வரை
பேசிக்கொள்ளவில்லை
இருவரும்
ஆனாலும் பழக்கமாயின
அவளுக்கு இயற்கையும்
எனக்கு அவள் ரசனையும்
Tuesday, February 03, 2009
பூக்களின் குழந்தை
மரத்தை அசைக்கிறாள் சிறுமி
பூக்கள் உதிர்கின்றன
கைதட்டி சிரிக்கிறாள்
மறுபடி அசைக்கிறாள்
தொலைவிலிருந்து
கூப்பிடுகிறார் தாத்தா
சிறுமியின் கைகள்
சொன்னதைக் கேட்டு
வடிந்து விட்டன்
அநேகமாய்
எல்லா பூக்களும்
அழைத்துப் போகிறார் தாத்தா
திரும்பிப் பார்த்தபடி செல்லும்
சிறுமியின் தலையில்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சில பூக்களும்
மரத்தின் பிரியமும்
(நேத்ராவுக்கு)
பூக்கள் உதிர்கின்றன
கைதட்டி சிரிக்கிறாள்
மறுபடி அசைக்கிறாள்
தொலைவிலிருந்து
கூப்பிடுகிறார் தாத்தா
சிறுமியின் கைகள்
சொன்னதைக் கேட்டு
வடிந்து விட்டன்
அநேகமாய்
எல்லா பூக்களும்
அழைத்துப் போகிறார் தாத்தா
திரும்பிப் பார்த்தபடி செல்லும்
சிறுமியின் தலையில்
ஒட்டிக் கொண்டிருக்கின்றன
சில பூக்களும்
மரத்தின் பிரியமும்
(நேத்ராவுக்கு)
Sunday, February 01, 2009
யாருக்கும் தெரியாதவன்
நான் வில்லனாக சித்தரிக்கப்பட்ட
உங்கள் நெடுங்கதையில்
என்னை கதாநாயகனாக
வைத்திருந்த பக்கங்களை
கிழித்து விட்டீர்கள்
உங்கள் கொடூரமும் வன்மமும்
ஏற்றப்பட்டு நான்
உலவ ஆரம்பித்தேன்
சண்டையிட்டேன்
குரூரம் பயின்றேன்
கொன்றேன்
இன்ன பலவும் செய்தேன்
என் ரத்தத்தை
உங்கள் பேனாவில் நிரப்பி
எழுதிக் கொண்டிருந்தீர்கள்
உங்கள் பசி அடங்க
எனனை பசிக்க வைத்தீர்கள்
என்னிடமிருந்து மனிதம்
எட்டிப் பார்க்கும் போதெல்லாம்
உள் தள்ளிப் பூட்டினீர்கள்
இரவு போதையில்
என்னை உங்களோடு அமரவைத்து
உரையாடி
மேலும் பல வியூகங்களை உருவாக்கினீர்கள்
என் கண்ணோரத் துளியைப்பற்றி
கவலைப்படாமல்
உங்கள் எழுத்தின் நியமனங்களின்படி
முடிவில் நான்
இறந்து விடுவேன்
உங்கள் கதை விவாதிக்கப்படும்
நீங்கள் பேசப்படுவீர்கள்
முடிந்திருப்பேன் நான்
யாருக்கும் தெரியாத கதாநாயகனாய்
உங்கள் நெடுங்கதையில்
என்னை கதாநாயகனாக
வைத்திருந்த பக்கங்களை
கிழித்து விட்டீர்கள்
உங்கள் கொடூரமும் வன்மமும்
ஏற்றப்பட்டு நான்
உலவ ஆரம்பித்தேன்
சண்டையிட்டேன்
குரூரம் பயின்றேன்
கொன்றேன்
இன்ன பலவும் செய்தேன்
என் ரத்தத்தை
உங்கள் பேனாவில் நிரப்பி
எழுதிக் கொண்டிருந்தீர்கள்
உங்கள் பசி அடங்க
எனனை பசிக்க வைத்தீர்கள்
என்னிடமிருந்து மனிதம்
எட்டிப் பார்க்கும் போதெல்லாம்
உள் தள்ளிப் பூட்டினீர்கள்
இரவு போதையில்
என்னை உங்களோடு அமரவைத்து
உரையாடி
மேலும் பல வியூகங்களை உருவாக்கினீர்கள்
என் கண்ணோரத் துளியைப்பற்றி
கவலைப்படாமல்
உங்கள் எழுத்தின் நியமனங்களின்படி
முடிவில் நான்
இறந்து விடுவேன்
உங்கள் கதை விவாதிக்கப்படும்
நீங்கள் பேசப்படுவீர்கள்
முடிந்திருப்பேன் நான்
யாருக்கும் தெரியாத கதாநாயகனாய்
அவனும் நானும்
இடது கை இழந்த
ஒரு மனிதனை
நான் வரைந்து கொண்டிருந்தபோது
அவன் வலது கையை நீட்டி
வண்ணங்களை எடுத்து
தன் இடது கையை
வரைந்து கொண்டிருந்தான்
புன்னகைத்தபடியே
ஒரு மனிதனை
நான் வரைந்து கொண்டிருந்தபோது
அவன் வலது கையை நீட்டி
வண்ணங்களை எடுத்து
தன் இடது கையை
வரைந்து கொண்டிருந்தான்
புன்னகைத்தபடியே
Subscribe to:
Posts (Atom)