ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Tuesday, May 06, 2008
பாதையின் கருணை
கை நீட்டிக் கேட்பவனை
ஏற்றிச் செல்ல
நிற்கவில்லை
எந்த வாகனமும்
வேகமாய்க் கடக்கின்றன
நடப்பவன் ஏற்றிச் செல்கிறான்
நிலவின் புன்னகையை
மழைத் தூறல்களை
நிற்காமல் போகச் சொல்லும்
பாதையின் கருணையை
பாட்டியின் கதை
கதைச் சொல்லிக்கொண்டே
வந்த பாட்டி
தூங்கிப்போனாள்
விழித்திருக்கிறது குழந்தை
கதாபாத்திரங்களுடன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)