Wednesday, April 29, 2009

பறந்த காகிதம்

எழுதிய காகிதம்
காற்றில் பறந்து
பூந்தொட்டி அருகில்
விழுந்தது
கவனித்துப் பார்க்க
பூந்தொட்டியில்
சிதறிக் கிடந்தன
வார்த்தைகள்
கவிதையில்
உதிர்ந்து இருந்தன
பூக்கள்

2 comments: