Tuesday, April 14, 2009

ஓடும் பேருந்தில்...

ஓடும் பேருந்தில்
பக்கத்து இருக்கையில்
அமர்ந்திருந்தவர்
எழுதிய கவிதையைப்
படிக்கச் சொன்னார்

நன்றியோடு வாங்கிப்
படிக்கும் போது
காற்று இழுக்க
விரல்களிலிருந்து விடுபட்டு
வெளியேப் போனது

பதற்றத்துடன் பார்க்க
அமைதிப் படுத்தினார்

என்னால் பறந்து போனதே
உங்கள் கவிதை என்றபோது
பறந்து போனது
காகிதம்தான் கவிதையல்லா
எனச் சொல்லி சிரித்தார்
ஒரு கவிதையைப் போல

No comments:

Post a Comment