Sunday, November 20, 2022

நான் எழுதிக்கொண்டிருந்தபோது

நான் எழுதிக்கொண்டிருந்தபோது

ஒரு பூனை தாவிக்குதித்து ஓடியது

மழை எட்டிப்பார்த்தது

சுவர்க் கடிகாரம் ஒழுங்குடன் ஒலித்தது

தூரத்து டீவியிலிருந்து குரல்கள்

படிக்கட்டில் யாரோ

வேகமாக ஓடினார்

ஜன்னல் திரைச்சீலை நடனமிட்டது

மேஜையை ஒரு எறும்பு

தன் ஊர்தலில் அளந்தது

பூச்சியை விழுங்கிய பல்லி

மெல்ல உள்ளே தள்ளியது

பசி வேண்டுகோள் வைத்தது

காலிங்பெல்லை யாரோ அடித்தார்கள்

நான் நிதானமாய் எழுந்து போய்

கதவைத் திறந்தேன்

அவர் வேகமாக உள்ளே வந்து

எழுத்துக்குள்

உணவை வைத்துச் சென்றார்

-         ராஜா சந்திரசேகர்