Wednesday, August 11, 2021

அமுதா எனும் தேவதை

 சொர்க்கத்திலிருந்து தங்கை அமுதா போன் செய்தாள்

அண்ணா எப்பிடி இருக்க

கொரோனா எப்படி இருக்கு

எல்லாரும் நல்லா இருக்காங்களா

நல்லவேளை அம்மா அப்பா எதுவும் சிரமப்படாம

என்கிட்ட வந்து சேர்ந்துட்டாங்க

பாண்டிச்சேரிக்குப் போனால் தன் மகள்களைப்

பார்த்துவரச் சொன்னாள்

அவர்கிட்டயும் அடிக்கடிப் பேசு என்றாள்

அந்த வயிற்றுக்கட்டி ஆப்பரேஷன் சரியாகச் செய்திருந்தால்

கேன்சரிலிருந்து தப்பித்திருப்பேன்

உங்களோடு இருந்திருப்பேன் என்றாள்

மகள்கள் கல்யாணங்களைப் பார்க்காமல் போய்விட்டதைச்

சொல்லி அழுதாள்

பேசிக்கொண்டே போனாள்

நான் புரண்டுபடுத்தேன்

ஈரமான தலையணையைத் தள்ளிவைத்துவிட்டு

கையைத் தலைக்கு வைத்துக்கொண்டேன்

விடிந்தவுடன்

சர்வீசுக்குக் கொடுத்த போனை

வாங்கிவர வேண்டும்

 

 

2 comments:

  1. கண்களில் கண்ணீர்
    வர வைத்து விட்டது
    உங்கள் கவிதை.

    வாழ்க்கையில்
    நம்மை நிலை குலைய
    வைக்கும் சில சம்பவங்கள்
    நினைவுகளாக...

    அருமை.

    ReplyDelete
  2. http://arputharaju.blogspot.com/2021/08/blog-post_16.html?m=0

    ReplyDelete