Friday, April 03, 2009

குழந்தையின் கடல்

நள்ளிரவில் எழுந்து
கடல் பார்க்க வேண்டும் என்று
அடம் பிடித்த
குழந்தையை
சமாதானப்படுத்தி
நாளை போகலாம்
எனச் சொல்லி
தூங்க வைக்க
பெரும்பாடாயிற்று
பின் விடியும் வரை
அலைகள் எழுப்பி
தூங்க விடாமல்
செய்தது
குழந்தையின் கடல்

1 comment:

  1. //விடியும் வரை
    அலைகள் எழுப்பி
    தூங்க விடாமல்
    செய்தது
    குழந்தையின் கடல்//

    அனுபவித்தேன்.

    ReplyDelete