Wednesday, June 24, 2009

ஒரு நடை பயணத்தில்...

ஒரு நடை பயணத்தில்
பேசிக்கொண்டு போனார்கள்
தந்தையும் மகனும்

வானத்தில் சிறகடிக்கும் பறவை
உனக்குத் தெரிகிறதா

இல்லை எனக்கு
வானம் ஒரு
பறவையின் சிறகாகத்
தெரிகிறது

*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது

1 comment:

  1. ஜென் தத்துவம் உள் அடங்கிய கவிதையாகவே எனக்கு தோன்றுகிறது.
    இன்னும் சில வரிகள் சேர்த்திருக்கலாம் என்பது என் கருத்து.

    ReplyDelete