388-
கண்ணீர் 
எனது திரவ புன்னகை 
என்றான்
யாராலும் அவனை 
அழவைக்க 
முடியவில்லை
389-
தயங்கி தயங்கி 
சொல்ல நினைப்பவனை 
கைவிடுகினறன
வார்த்தைகள் 
தயங்காமல் 
சொல்ல நினைப்பவனை 
அழைத்துச் செல்கிறது
மொழி 
390-
நுனி பிடித்து 
நடக்கிறேன்
 
நுனி என்று 
எதுவுமில்லை
 
நடக்கிறேன்
 
நுனி பிடித்து 
எனை பிடித்து
391-
நீங்கள் சிந்திய சொல் 
முள்ளாய் 
விளைந்து கிடக்கிறது 
சொல்லாமல் 
சென்றுவிடுங்கள்
392-
அரங்கம் முழுதும் 
பார்க்க வேண்டும் 
மேடையில் நிற்கிறான்
மேடை பார்க்கிறது 
அவனையும் 
அரங்கையும்
//
ReplyDeleteகண்ணீர்
எனது திரவ புன்னகை
என்றான்
யாராலும் அவனை
அழவைக்க
முடியவில்லை
//
intha varudaththin sirantha kavithaiyaaga ithai thervu seiyalaam.....
marakkave mudiyaathunga.
avvalavu pidichurukku.