Sunday, February 13, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

364-

எல்லாமே
தொடர்ந்து வரவேண்டும்

எல்லாவற்றையும்
தொடந்து செல்லவேண்டும்

தவிர்க்க வேண்டும்
இந்த நினைவை

365-

மீன்தொட்டியில்
ஊற்றுகிறாள் குழந்தை
கொண்டுவந்த கடலை

366-

கதவடைக்கிறாய்
சாவிதுவாரத்தில்
பரவும் ஒளி
திறக்கப் பார்க்கிறது
உன் இருளை

367-

இந்தப் பள்ளத்தாக்கு
கடவுள் ஊற்றிய
வண்ணங்களால்
நிரம்பி இருக்கிறது

368-

வழி தப்பும் ஆடுகளாய்
நினைவுகள் போகும்
விரட்டிப் பிடித்தாலும்
வேறிடம் மாறும்

369-

தெரிந்தே
தொலைந்திருக்கிறேன்
தேடாதீர்கள்

No comments:

Post a Comment