Tuesday, February 22, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

377-

உங்கள் கண்ணீர்
உண்மையா
பொய்யா

நான் பொய்
கண்ணீர் உண்மை

378-

கிளையில் பறவை
தொங்க வந்தவன் ரசிக்கிறான்
அலகு கொத்துவதைப் பார்த்து

379-

பனிப்பாறை மேல்
படுத்திருந்தேன்
பாறை உருகுவதை நானும்
நான் உருகுவதை
பனியும் பார்த்தபடி

380-

ஒட்டடை
படிந்த தூரிகை
ஓவியத்தைப் பார்க்காது

381-

ஒத்திகை செய்யும் மரணம்
ஒருபோதும்
நேரத்தை சொல்வதில்லை

382-

விதியை
உருவாக்குபவர்களை
விதி ஒன்றும்
செய்வதில்லை

2 comments:

  1. //ஒட்டடை
    படிந்த தூரிகை
    ஓவியத்தைப் பார்க்காது
    //
    பொன்மொழி போல் ஒரு கவிதை. அருமை.

    ReplyDelete
  2. //

    உங்கள் கண்ணீர்
    உண்மையா
    பொய்யா

    நான் பொய்
    கண்ணீர் உண்மை

    //

    :)

    ReplyDelete