Wednesday, February 02, 2011

பறவையின் பெயர்

என் பெயர் சொல்லி
கூப்பிட்டது பறவை

எப்படி என் பெயர்
தெரியும் என்றேன்
ஆச்சர்யத்துடன்

நீயேதான்
சொன்னாய் என்றது

எங்கு
எப்படி

நீ ஒரு மரத்தை
கனவு கண்டபோது
அதன் கிளையில்
நான் வந்து அமர்ந்தேன்

அப்போது
விழுந்தது பழம்

நீ அதை எடுத்து
சுவைத்தபடி
உன் பெயர்சொல்லி
என் பெயர் கேட்டாய்

நீயே ஏதாவது
வைத்துக்கொள்
எனச்சொல்லிவிட்டு
பறந்துபோனேன் என்றது

அப்போது யோசித்த பெயரை
சொல்லி கூப்பிடுவதற்குள்
இப்போதும்
பறந்து போயிருந்தது

No comments:

Post a Comment