Thursday, February 10, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

354-

வேரிலிருந்து
கிளைக்குத் தாவும்
மரம்

355-

முன்வலி போலில்லை
இவ்வலி
தடவிக்கொள்ளும் ஆறுதல்
குறைக்கப் பார்க்கும்
வலியின் வலியை

356-

மெளனம் என்பது
சத்தமில்லாதிருத்தல் அல்ல
சத்தத்தின் கரையில்
பூத்திருத்தல்

5 comments:

  1. சவிதைகள் அருமை...

    வேரிலிருந்து
    கிளைக்குத் தாவும்
    மரம்
    மீண்டும் இலை உதிர்ந்து
    வேருக்கு வரும்..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. நன்றி செளந்தர்,மதுரை சரவணன்.

    ReplyDelete