Wednesday, December 15, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

261-

வார்த்தைகளுக்கிடையில்
நிசப்தம்
தொட்டுப் பார்க்கும் கவிதை

262-

அன்பு
மையம்
பிரபஞ்சம்
வட்டம்

263-

எப்போதும் போல்
இப்போது சிரித்தீர்களா

ஆமாம்

எப்போதும் போல
இப்போது அழுவீர்களா

எப்போதும் போல் மனிதர்கள்
எப்போதும் இருப்பதில்லை

264-

உன் இறகை
கத்தரித்துவிட்டேனே
எப்படிப் பறப்பாய்

உன்னால்
எங்கள் இறகைதான்
கத்தரிக்கமுடியும்
சுதந்திரத்தையல்ல

265-

இன்றிரவு
தின்னப்போகிறவன் யார்
பசியோடு பார்க்கிறாள்

266-

எழுதிப் பார்த்த
கதை சொன்னது
இன்னும்
எழுதிப்பார் என்று

2 comments:

  1. //இன்றிரவு
    தின்னப்போகிறவன் யார்
    பசியோடு பார்க்கிறாள்//

    The Best!!!!!!!!

    ReplyDelete