Sunday, December 12, 2010

அன்பின் மொழிகள்

1-

இது கவிதையல்ல
உன் பிரியங்களின்
பூக்கூடை

2-

பெருமிதம் கொள்கிறேன்
உன் அன்பின் முன்
அடிமையாகிப்
போவதை நினைத்து

3-

முழுக் கடலையும்
ஒற்றைத் துளியாக்கி
அன்பு என்று எழுதியபோது
கடலாகிப்போனது
அன்பு

4-

உயிர்
உடையும்போதெல்லாம்
காதல் சேர்த்துவிடுகிறது

5-

உனக்கான கவிதைகளை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
அதில் நீ
எனக்கான வாழ்த்துக்களைச்
சொல்லிக்கொண்டிருக்கிறாய்

2 comments:

  1. நல்லா இருக்குங்க தொடருங்க

    ReplyDelete
  2. எல்லாமே நல்லா இருக்கு. குறிப்பா மூன்றாவது கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete