Saturday, December 04, 2010

ஒலிநாடா சுற்றிக்கொண்டிருக்கிறது

பதிவு செய்த
வரிகளில்
காகத்தின் குரலும்
ஒலித்தது

வரிகளில்
குதிக்கும் இசைபோல்
கேட்டது

கேட்கக் கேட்க
காகத்தின் குரல் நின்று
அது பாடலின் வரியை
ஒவ்வொன்றாய்
உட்கொண்டது

இறுதியில்
ஒலிநாடா சுற்றிக்கொண்டிருந்தது
எந்தவித
சத்தங்களுமற்று

No comments:

Post a Comment