472-
கடைசி ஆசையையும் 
புதைத்தேன் 
சவப்பெட்டியில் 
பூத்திருக்கும் மலர்கள் 
உதிர நாளாகும்
473-
இல்லை என்பவர்களிடம் 
இருக்காது 
பெரிதாக எதுவும்
474-
முதல் வார்த்தைக்கு 
தவமிருந்தேன் 
மற்றவை 
வார்த்தைகளின் தவங்கள்
475-
வழிகளில் 
தொலைபவன் நான் 
வழிகளை 
தொலைப்பவன் அல்ல
476-
ஒரு நூல்கண்டால் 
என்னைக் கட்டிப்போட்டேன் 
பின் நூல்கண்டு 
அறுபடாமல் வெளியேறினேன் 
அறுபட்ட காயங்களில் நான்
அங்குமிங்குமாய் 
கொஞ்சம் 
சிதறி இருக்கலாம்
 
 
கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அனுபவச் சித்தனின் படைப்புகள் அல்லவா?
ReplyDeletehttp://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
nallaayirukku......
ReplyDelete//இல்லை என்பவர்களிடம்
ReplyDeleteஇருக்காது
பெரிதாக எதுவும்//
அபாரமான வரிகள்.நிஜமான கருத்து.
வாழ்த்துக்கள்.
நன்றி குடந்தை அன்புமணி,இரசிகை,மால்குடி.
ReplyDeleteசந்திப்போம்.