Wednesday, May 25, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

511-

ஊசிக்குள்
நான் நுழைந்து
பின் வரச்சொன்னேன்
தயங்கிய நூலை

512-

இருளில்
ஒரு தவறு செய்தேன்

தவறுக்கு
இருளையும் உடந்தையாக்கியது
இன்னொரு
தவறாகிப்போனது

513-

நுனிப்புல் மேய்பவர்களிடம்
கேட்காதீர்கள்
வேரின் ருசி பற்றி

514-

அறையை
பந்தயமைதானமாக்கிய
தனிமை
தூக்கி எறிந்து விளையாடியது
என்னை

515-

போகக்காணோம்
நான்கள் துப்பி
ஏறிய கறைகள்

516-

எதுவுமற்று
முடிந்த கவிதை
அனாதையாகிவிட்டது
எதுவுமற்று

517-

காற்றே
இசைதான்

1 comment:

  1. வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete