Saturday, May 21, 2011

நட்புடன்

குறுகிய அறையை
கண்டுபிடித்து
ஜன்னல் திறக்கும்போதெல்லாம்
வந்துவிடுகிறது குருவி

நானாய் விரட்டியதில்லை
அதுவாயும் போனதில்லை

அது இருந்துபோகும்
தருணங்களில்
விசாலமாகிவிடுகிறது
அறையும்

1 comment: