Tuesday, May 24, 2011

மீண்டும் மீண்டும்

நீங்கள் பொம்மையை
உடைத்துவிட்டதற்காக
குழந்தை அழவில்லை
தன்னை உடைத்துவிட்டதால்
அழுகிறது
அது தெரியாமல்
புதிதுபுதிதாய்
பொம்மைகளைத் தயாரிக்கிறீர்கள்
மீண்டும் மீண்டும்
குழந்தைகளை உடைக்கிறீர்கள்

1 comment: