Saturday, May 21, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

501-

யார் போட்டார்
தெரியவில்லை
உட்செவியில்
குவிந்த பொய்கள்

502-

உயிர்விடாது
நீர் துளியில்
நீந்தும் மீன்

503-

நடக்கும்போதெல்லாம்
போதிக்கும்
சாலைகள்

5O4-

இடைவெளியில்
மறைந்துகிடக்கும்
இடைவெளிகள்

505-

பிய்த்தெறியும்போது
குத்தியதைவிடவும்
வலி

506-

வழியும் கண்ணீரில்
முடிந்துபோகிறது
ஏதோ ஒரு கனவு

507-

ஊர்ந்துபோகிறது
அமைதி
அமைதியாக

508-

எடுத்துக்கொள்கிறேன்
தேவையுள்ளதில் இருந்து
மிகத் தேவையானதை

509-

துண்டு துண்டாக
உறங்கிவிடுகிறேன்
உள்சதுரங்களில்

510-

சிலர் பேச்சில்
குரைக்கும்
நாய் சத்தம்

2 comments:

  1. அருமையாக வந்திருக்கிறது.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //

    சிலர் பேச்சில்
    குரைக்கும்
    நாய் சத்தம்

    //

    :))

    ReplyDelete