Wednesday, February 02, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

342-

பிஞ்சு ஒளி
நிரம்பி வழியும்
தேநீர் கோப்பையில்

343-

கனவில்
வருகிற கனவுகளை
பார்ப்பது எந்நாள்

344-

சுடர் பெயர்ந்து
போனது காற்றோடு

இருள் இருந்து
பேசுது என்னோடு

345-

என் இலையில்
பசியைப் பரிமாறியது
யார்

346-

மன்னிக்கவும்
உங்கள் வார்த்தைகளில்
சத்தம் மட்டுமே
அர்த்தம் இல்லை

347-

இருள் மெளனம்
என்று தோன்றியது
இருள் கழிந்தது
மெளனம் விட்டு

1 comment:

  1. மன்னிக்கவும்
    உங்கள் வார்த்தைகளில்
    சத்தம் மட்டுமே
    அர்த்தம் இல்லை

    :)

    ReplyDelete