Sunday, May 02, 2010

புல்லாங்குழலில் விழுந்த எறும்பு

விரல்களால் பேசுகிறார்
பியானோவுடன்
வாசிக்கும் பெரியவர்

----

என் ஆரவாரம் எறியும் பூக்கள்
வாங்கிக் கொண்டோடும் நதி
இசைலயத்துடன்

---

புல்லாங்குழலில் விழுந்த எறும்பை
எடுத்துப் போட்டேன்
இசையில் விழுந்த எறும்பை
முடியவில்லை

3 comments: