Thursday, May 13, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

90-

நிரம்பி வழிகிறது
மழை
சவப்பெட்டியில்

91-

எழுதாத கவிதை
எழுதிய பிறகும் இருந்தது
எழுதாத கவிதையாக

92-

என்னுள் போகும்போது
கதவுகளே இல்லை
திரும்பும்போது
நானே இல்லை

3 comments: