Monday, May 17, 2010

எனக்கானது

மெளனத்தின் மீது
அமர்ந்திருந்த பறவையை
விரட்டினேன்
அது போனபோது
விழுந்த சிறகில்
எழுதி இருந்தது
மெளனத்திற்கான நன்றியும்
எனக்கான தண்டனையும்

6 comments:

  1. மனவெளியில் கனவுகள் குவிந்துதான் கிடக்கின்றன. ஸ்பெக்ட்ரம் காட்டும் வண்ணங்களையும் தாண்டிய நிறம் கொண்ட பறவை, பறவையின் நிறம் பறவையுடையதா? இறகினுடையதா? கனவுகள் உதிர்ந்து விட்ட மனம் வெறுமையடைகிறது இல்லையா? இறகுகள் கனவுகள் எனக் கொண்டால், பறவைக்கு நிறமே கிடையாது.. என்ன சரிதானே? :)

    மிகுந்த அன்புடன்,
    விதூஷ்

    ReplyDelete
  2. நன்றி இரசிகை,கல்யாணி,கெளரிப்ரியா.

    ReplyDelete
  3. அன்பு விதூஷ்
    உங்களின் கூர்மையான பார்வையில் கவிதையின் வெளி விரிகிறது.நன்றி.

    ReplyDelete