Thursday, May 27, 2010

கொண்டு வந்த மழை

ஏணி வரைந்தாள் குழந்தை
இதில் எவ்வளவு
உயரம் போகலாம் என்றேன்
வானம் வரை என்றாள்
போய் வந்ததை
உறுதி செய்வதுபோல்
கொண்டு வந்த மழையை
முகத்தில் தெளித்தபடி ஓடினாள்

4 comments:

  1. உங்கள் கவிதைகளில் உள்ள தனிச்சிறப்பே அவை காட்சிகளாக கண் முன்னால் விரிகின்றன என்பது தான். அந்த சிறுமியின் சிரிப்பு சத்தத்தை என்னால் கேட்க முடிகிறது.

    ReplyDelete
  2. நன்றி அசோக்,சாய்ராம் மற்றும் இரசிகை.

    ReplyDelete