Thursday, January 27, 2011

நன்றி பிகாஸோ

பிகாஸோவுடன்
பேசிக்கொண்டிருந்தேன்
கனவிலிருந்து
வெளியேறும் வரை

கடைசி தருணத்தில்தான்
பார்த்தேன்

அவர் என் பெயரை
எழுதிவிட்டுப்
போயிருப்பதை

பாதரசம் போல்
ததும்பியது பெயர்

என்னையே வரைந்திருக்கலாமே
என்ற ஆதங்கத்துடன்
பெயரை ஊத
முகம் வந்தது

என் முகம்தான்

நம்புங்கள்

என் முகமேதான்

நன்றி பிகாஸோ

No comments:

Post a Comment