Sunday, January 23, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

330-

இது தவமல்ல

வெறும் கண்மூடல்தான்

நீங்கள்
கல்லெறியலாம்

331-

என் கேள்வி உங்களை
பாரமாக அழுத்துகிறதா

இல்லை
விடையாக இலேசாக்குகிறது

332-

கிளையில் ஏறிய எறும்பு
கேட்டது மரத்திடம்
பாரமாக இருக்கிறேனா
கிளை அசைத்து
சொன்னது மரம்
உன் கேள்விதான்
பாரமாக இருக்கிறது

333-

நீங்கள் நினைத்த இடத்தில்
முடித்துக்கொள்ளலாம்

நினைக்கும் இடத்தில்
தொடங்கலாம்

அதுபோல்
வடிவமைக்கப்பட்டிருக்கிறது
இந்தக் கவிதை

1 comment:

  1. //

    இது தவமல்ல

    வெறும் கண்மூடல்தான்

    நீங்கள்
    கல்லெறியலாம்

    //

    superb.....

    ReplyDelete