Tuesday, January 11, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

315-

இரவு
பார்க்காவிட்டால் என்ன
இருள் பார்க்கிறது

316-

எதுவும் கேட்காமல்
வெளியேறுகிறாய்
நீ எவ்வளவோ
எடுத்துப்போவதுபோல்
தோன்றுகிறது

317-

முன்நாக்கு வரை
கொண்டுவந்த ஓவியத்தைப்
போட்டுக் கிழித்தேன்
சொற்களின் குழப்பத்தால்

318-

புள்ளியைத் தொட்டேன்
ஒளிந்திருந்த மேகம்
நனைத்துச் சிரித்தது

319-

அமைதியாக
வெளியேறச் சொல்கிறார்கள்
அமைதியை வெளியேற்றத்
துடிப்பவர்கள்

No comments:

Post a Comment