Monday, January 03, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

300-

வானம் கொறிக்கும் பறவைக்கு
தானியமாகிறது
மழை

301-

நீண்ட சுவர்
உலகத்தை மறைக்கிறது
ஒற்றை ஜன்னல்
உலகத்தை இணைக்கிறது

302-

மிதந்தபோது
இறந்துபோனேன்
இறந்தபோது
புதைந்துபோனேன்

303-

தனியாய்
எனக்கெதுவும்
அடையாளமில்லை
எல்லாமே அன்புதான்

304-

கடல் உண்ட மலைப்பாம்பு
இறந்துபோனது
விக்கல் எடுத்து

305-

நுனி நாக்கில்
முறிந்து கிடக்கும் மரம்
சொற்களின் பாரம் தாங்காமல்

2 comments: