Thursday, June 24, 2010

கப்பல்கள்

கப்பல்கள்
வழி தெரியாமல்
இருளில் நிற்கின்றன என்றேன்

தேவதை சிரிப்புடன்
பார்த்த சிறுமி
நோட்டை எடுத்து
கலங்கரை விளக்கை
வரைந்தாள்

கப்பல்கள்
ஒளி பெற்று
வழி பார்த்துப் புறப்பட்டன

பின் ஓவிய நோட்டை மூடி
பையில் வைத்து
பள்ளிக்கூடம் போனாள்

அவளுக்குத் தெரியாமல்
அவளைத் தொடர்ந்தன
கப்பல்களும்

7 comments:

  1. குழந்தைகள் போலவே கவிதையும் அவ்வளவு அழகு!

    ReplyDelete
  2. மிகவும் அருமை ரசித்தேன்

    ReplyDelete
  3. ஒரு சின்னஞ்சிறு தேவதையின் பின்னாடி கப்பல்கள் அணிவகுத்து போகும் காட்சி கண்ணுக்குள்ள விரியுதுங்க. Superb Raajaa. :)

    ReplyDelete
  4. ungal thuligalial silirthen nanaiyamudiyavillai thulasi

    ReplyDelete
  5. அருமையான கவிதை. மிகவும் ரசித்தேன் நண்பரே.

    ReplyDelete