Saturday, July 03, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

123-

கதவை திறந்து பார்க்க
பூதம் நின்றது
அதன் கையில்
என் முகவரி இருந்தது
யாரென்று கேட்க
உனது பொய் என்றது

124-

எழுத எதுவும்
கிடைக்கக் காணோம்
திரும்ப சீவுகிறேன் பென்சிலை

125-


இங்கிருந்த என்னை
காணவில்லை என்றார் ஒருவர்

அதோ அங்கிருக்கிறாரே
அவரா என்றேன்

கேட்டு வருகிறேன்
என்று போனார்

நான் காணாமல் போனேன்

No comments:

Post a Comment