கை நீட்டிக் கேட்பவனை
ஏற்றிச் செல்ல
நிற்கவில்லை
எந்த வாகனமும்
வேகமாய்க் கடக்கின்றன
நடப்பவன் ஏற்றிச் செல்கிறான்
நிலவின் புன்னகையை
மழைத் தூறல்களை
நிற்காமல் போகச் சொல்லும்
பாதையின் கருணையை
Tuesday, May 06, 2008
பாட்டியின் கதை
கதைச் சொல்லிக்கொண்டே
வந்த பாட்டி
தூங்கிப்போனாள்
விழித்திருக்கிறது குழந்தை
கதாபாத்திரங்களுடன்
வந்த பாட்டி
தூங்கிப்போனாள்
விழித்திருக்கிறது குழந்தை
கதாபாத்திரங்களுடன்
Sunday, April 20, 2008
மான்யா
காலையை அழகுபடுத்தி
சென்றுகொண்டிருந்தன
பள்ளிக்குழந்தைகள்
என்னை கவர்ந்த
ஒரு குழந்தைக்குப்
பெயரிட்டேன்
மான்யா
பள்ளிக் கடக்கும்போதெல்லாம்
என் மான்யாவைப் பார்ப்பது
வழக்கமாயிற்று
அவள் நடைஅசைவும்
கண்களிலிருந்து
கொட்டும் கனவுகளும்
சுகமானவை
பள்ளிவிடுமுறை நாட்களில்
பார்க்க முடியாமல் போகும்
மான்யாவை
சந்திக்க வாய்ப்புக்கிடைத்த
ஒரு தருணத்தில்
அவளிடம் கேட்டேன்
உன் பெயரென்ன
சிரித்தபடி பார்த்தவள்
பேசினாள்
உங்களுக்கு என்ன
பிடிச்சிருந்தா
உங்களுக்கு பிடிச்ச பேர்ல
கூப்பிடுங்க
மான்யா
கேட்டு
நாக்கில் சுவையூறும்படி
சொல்லிப்பார்த்தாள்
பள்ளிமணி அழைக்க
கை அசைத்தபடி ஓடி
தன் தோழியோடு
சேர்ந்துகொண்டு சொன்னாள்
என்னோட
இன்னோரு பேரு
மான்யா
சென்றுகொண்டிருந்தன
பள்ளிக்குழந்தைகள்
என்னை கவர்ந்த
ஒரு குழந்தைக்குப்
பெயரிட்டேன்
மான்யா
பள்ளிக் கடக்கும்போதெல்லாம்
என் மான்யாவைப் பார்ப்பது
வழக்கமாயிற்று
அவள் நடைஅசைவும்
கண்களிலிருந்து
கொட்டும் கனவுகளும்
சுகமானவை
பள்ளிவிடுமுறை நாட்களில்
பார்க்க முடியாமல் போகும்
மான்யாவை
சந்திக்க வாய்ப்புக்கிடைத்த
ஒரு தருணத்தில்
அவளிடம் கேட்டேன்
உன் பெயரென்ன
சிரித்தபடி பார்த்தவள்
பேசினாள்
உங்களுக்கு என்ன
பிடிச்சிருந்தா
உங்களுக்கு பிடிச்ச பேர்ல
கூப்பிடுங்க
மான்யா
கேட்டு
நாக்கில் சுவையூறும்படி
சொல்லிப்பார்த்தாள்
பள்ளிமணி அழைக்க
கை அசைத்தபடி ஓடி
தன் தோழியோடு
சேர்ந்துகொண்டு சொன்னாள்
என்னோட
இன்னோரு பேரு
மான்யா
Thursday, April 17, 2008
...என்றொரு மருத்துவர்
என் நோய்கள் குறித்து
அக்கறையோடு விசாரித்தார்
மருத்துவர்
தெரியாத பலவும்
தெரிவித்தார்
மருந்துகளின் வரிசை
நீண்டது
மதுக்கடைப்பக்கம்
போகக்கூடாது
கட்டளையிட்டார்
வயது கூட
அது நோய்களுக்குக்
கதவுகளைத் திறந்து விடுகிறது
மறக்காதே என்றார்
கடைசியாய்க் கேட்டார்
என்ன தொழில்
செய்கிறீர்கள்
எழுத்தாளன்
கதை கவிதை
எனது தொழில்
புன்னகைத்தார்
உங்கள் எழுத்து
வாழ்க்கையை நகர்த்துகிறதா
அறை மின்விசிறி
நின்று போக
வெளிக் காற்றில்
தாள்கள் படபடக்க
முகம் துடைத்தபடிப்
பார்த்தேன்
வயது கூட
அது நோய்களுக்குக்
கதவுகளைத் திறந்து விடுகிறது
ஆரம்பித்திருந்த
என் கதையின் வரி
அங்கேயே நின்றிருந்தது
அக்கறையோடு விசாரித்தார்
மருத்துவர்
தெரியாத பலவும்
தெரிவித்தார்
மருந்துகளின் வரிசை
நீண்டது
மதுக்கடைப்பக்கம்
போகக்கூடாது
கட்டளையிட்டார்
வயது கூட
அது நோய்களுக்குக்
கதவுகளைத் திறந்து விடுகிறது
மறக்காதே என்றார்
கடைசியாய்க் கேட்டார்
என்ன தொழில்
செய்கிறீர்கள்
எழுத்தாளன்
கதை கவிதை
எனது தொழில்
புன்னகைத்தார்
உங்கள் எழுத்து
வாழ்க்கையை நகர்த்துகிறதா
அறை மின்விசிறி
நின்று போக
வெளிக் காற்றில்
தாள்கள் படபடக்க
முகம் துடைத்தபடிப்
பார்த்தேன்
வயது கூட
அது நோய்களுக்குக்
கதவுகளைத் திறந்து விடுகிறது
ஆரம்பித்திருந்த
என் கதையின் வரி
அங்கேயே நின்றிருந்தது
Tuesday, April 15, 2008
Friday, April 11, 2008
வெளவால் மண்டபம்
இருளில்
பசியில்
ஏதுமில்லாமல்
கிடந்த
பிச்சைக்காரியைப்
புணர்ந்தவர்கள்
விலகிப்போனார்கள்
வேகமாய்
அவள் அழுகை
அங்குமிங்குமாய் அலைந்து
வழி அறியாமல்
திரும்புகிறது
அவளிடமே
நடுங்கும்
வெளவால் மண்டபம்
அவளோடு சேர்ந்து
உதவிக்கு வர இயலாமல்
புரண்டு படுக்கிறான்
கல்லறைக்குள் இருப்பவன்
அவள் ரத்தம் கலைக்கப்
பெய்கிறது மழை
துன்பம் பார்த்து
நகர்கிறது பெளர்ணமி
மண் அள்ளி வீசி
உலகை சபிக்கிறது
ஒரு பைத்தியத்தின் குரல்
(புதிய பார்வை ஏப்ரல்16-30,08இதழில்
பிரசுரமானது)
பசியில்
ஏதுமில்லாமல்
கிடந்த
பிச்சைக்காரியைப்
புணர்ந்தவர்கள்
விலகிப்போனார்கள்
வேகமாய்
அவள் அழுகை
அங்குமிங்குமாய் அலைந்து
வழி அறியாமல்
திரும்புகிறது
அவளிடமே
நடுங்கும்
வெளவால் மண்டபம்
அவளோடு சேர்ந்து
உதவிக்கு வர இயலாமல்
புரண்டு படுக்கிறான்
கல்லறைக்குள் இருப்பவன்
அவள் ரத்தம் கலைக்கப்
பெய்கிறது மழை
துன்பம் பார்த்து
நகர்கிறது பெளர்ணமி
மண் அள்ளி வீசி
உலகை சபிக்கிறது
ஒரு பைத்தியத்தின் குரல்
(புதிய பார்வை ஏப்ரல்16-30,08இதழில்
பிரசுரமானது)
சொற்களில் பெய்த மழை
நின்றவுடன் போகலாம்
இருக்கச் சொன்னேன்
வேலை இருப்பதாகப்
புன்னகைத்தபடியே
போனார் நண்பர்
அடுத்த முறை
வந்தபோது
அவர் சொற்களில்
பெய்து கொண்டிருந்தது
நனைந்து சென்ற மழை
(புதிய பார்வை ஏப்ரல்16-30,08இதழில்
பிரசுரமானது)
இருக்கச் சொன்னேன்
வேலை இருப்பதாகப்
புன்னகைத்தபடியே
போனார் நண்பர்
அடுத்த முறை
வந்தபோது
அவர் சொற்களில்
பெய்து கொண்டிருந்தது
நனைந்து சென்ற மழை
(புதிய பார்வை ஏப்ரல்16-30,08இதழில்
பிரசுரமானது)
Saturday, March 08, 2008
ஒவ்வொரு முறையும்
ஒரு தேநீர் நேரத்தில்
கசாப்புக் கடைக்கார நண்பர்
மௌனமாய் சொன்னார்
ஒவ்வொரு முறை
வெட்டும் போதும்
என் மரணத்தையும்
பார்க்கிறேன்
கசாப்புக் கடைக்கார நண்பர்
மௌனமாய் சொன்னார்
ஒவ்வொரு முறை
வெட்டும் போதும்
என் மரணத்தையும்
பார்க்கிறேன்
மொழியற்ற மொழியில்
சிறுமியும் பறவையும்
பேசிக்கொண்டிருக்கிறார்கள்
மொழியற்ற மொழியில்
--------
பள்ளி விடுமுறை
சிலேட்டை மழையில்
நீட்டும் சிறுமி
----------
பேசிக்கொண்டிருக்கிறார்கள்
மொழியற்ற மொழியில்
--------
பள்ளி விடுமுறை
சிலேட்டை மழையில்
நீட்டும் சிறுமி
----------
என் மரணத்தை கொண்டாடுங்கள்
என் மரணத்தை கொண்டாடுங்கள்
உங்கள் சிரிப்பில்
இந்த வரிகளை
யோசித்தபோது
ஒரு மரணம் நிகழ்ந்தது
எழுதியபோது
ஒரு மரணம் எரியூட்டப்பட்டது
ஒன்று புதைக்கப்பட்டது
வெளியானபோது
சில மரணங்கள் நெருங்கிக்கொண்டிருந்தன
படித்து புன்னகைத்தவர்
புறப்பட்டுப்போனார்
ஒரு மரணசேதி கேட்டு
பழைய காகித கடையில்
அதைப் பார்த்த சிறுவன்
தாத்தாவை நினைத்து கொண்டான்
என் மரணத்தை கொண்டாடுங்கள்
உங்கள் சிரிப்பில்
சத்தம் போட்டுச் சென்றவனை
எல்லோரும் பார்த்தார்கள்
எப்போதும் பார்க்கும்
ஒரு பைத்தியத்தைப் போல
உங்கள் சிரிப்பில்
இந்த வரிகளை
யோசித்தபோது
ஒரு மரணம் நிகழ்ந்தது
எழுதியபோது
ஒரு மரணம் எரியூட்டப்பட்டது
ஒன்று புதைக்கப்பட்டது
வெளியானபோது
சில மரணங்கள் நெருங்கிக்கொண்டிருந்தன
படித்து புன்னகைத்தவர்
புறப்பட்டுப்போனார்
ஒரு மரணசேதி கேட்டு
பழைய காகித கடையில்
அதைப் பார்த்த சிறுவன்
தாத்தாவை நினைத்து கொண்டான்
என் மரணத்தை கொண்டாடுங்கள்
உங்கள் சிரிப்பில்
சத்தம் போட்டுச் சென்றவனை
எல்லோரும் பார்த்தார்கள்
எப்போதும் பார்க்கும்
ஒரு பைத்தியத்தைப் போல
Friday, March 07, 2008
காசோலையின் கண்கள்
சற்றுத் தள்ளி
தேதி இடப்பட்டிருக்கும்
இந்த காசோலையை
உடனே வங்கியில்
போட முடியாது
சத்தம் குறைத்துள்ளேன்
கோரிக்கைகளை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
என் நாள் பதற்றத்தைப்
பார்த்தபடி
கண் சிமிட்டுகின்றன
காசோலையின் கண்கள்
தேதி இடப்பட்டிருக்கும்
இந்த காசோலையை
உடனே வங்கியில்
போட முடியாது
சத்தம் குறைத்துள்ளேன்
கோரிக்கைகளை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
என் நாள் பதற்றத்தைப்
பார்த்தபடி
கண் சிமிட்டுகின்றன
காசோலையின் கண்கள்
Saturday, March 01, 2008
வழி அறியாக் குளிர்
முட்டும் காற்றில்
அசையும்
மழைக்கயிறுகள்
கண்ணாடியில் மொய்க்கும்
துளிகள்கூட்டம்
வழி அறியாக் குளிர்
கைகள் அணைத்த
தேநீர் கோப்பை
இறங்கும் சூடு
துன்பம் தராத தனிமை
பழகிய காத்திருப்பு
கூப்பிட்டாய்
கைபேசியில்
உன் பெயர்
ஒரு புதிரைப்போல
அழகான பொய்களோடு
சில உண்மைகளும்
வராதது குறித்து
வருத்தம் தெரிவித்தாய்
இந்த முறையும்
என் மௌனம் உன்னை
ஒன்றும் செய்யவில்லை
பிறகு பேசுவதாகத்
துண்டித்தாய்
உன் குரல் மறைய
கேட்கத் தொடங்கினேன்
மழையின் பேச்சை
அசையும்
மழைக்கயிறுகள்
கண்ணாடியில் மொய்க்கும்
துளிகள்கூட்டம்
வழி அறியாக் குளிர்
கைகள் அணைத்த
தேநீர் கோப்பை
இறங்கும் சூடு
துன்பம் தராத தனிமை
பழகிய காத்திருப்பு
கூப்பிட்டாய்
கைபேசியில்
உன் பெயர்
ஒரு புதிரைப்போல
அழகான பொய்களோடு
சில உண்மைகளும்
வராதது குறித்து
வருத்தம் தெரிவித்தாய்
இந்த முறையும்
என் மௌனம் உன்னை
ஒன்றும் செய்யவில்லை
பிறகு பேசுவதாகத்
துண்டித்தாய்
உன் குரல் மறைய
கேட்கத் தொடங்கினேன்
மழையின் பேச்சை
Monday, February 18, 2008
அவனைப் பற்றிய குறிப்புகள்
இரவு மூடுமுன்
மதுபானக் கடையில்
கடைசி பாட்டிலும்
திறக்கும் சமயம்
முதல் பாட்டிலும் வாங்குபவன்
சபிக்கப்பட்டவனாக
தன்னைப் பற்றித் தோன்றும்
உணர்வை வெளித்தள்ள
விடுவிடுவென
போதைக்குள் இறங்குகிறான்
முந்தைய போதைகளின்
மிச்சங்களும் சேர
தன்னைப் பெயர்த்து
எதிரில் உட்காரவைத்து
இன்னொருவருடன் பருகுவது போன்ற
தோற்றத்தைப் பெற்று
அமைதியின் ஆசிர்வாதம் கிடைத்ததாகச்
சொல்லிக்கொள்கிறான்
தன்னைக் கிளறும்
அழைப்பு மணிகளை
ஒவ்வொன்றாக
நிறுத்திக்கொண்டே வருகிறான்
கால்களின் நடனத்தில்
சிக்கி விழாமல்
கவனமாய் நடந்து
வெளியே வருபவன்
மழையைத்திட்டியபடி
நனைந்து
எதிரே போய்
ஒதுங்கி நின்று
பார்த்தபடியே இருக்கிறான்
மழைத் திரையிட்ட
மதுபானக்கடையை
மதுபானக் கடையில்
கடைசி பாட்டிலும்
திறக்கும் சமயம்
முதல் பாட்டிலும் வாங்குபவன்
சபிக்கப்பட்டவனாக
தன்னைப் பற்றித் தோன்றும்
உணர்வை வெளித்தள்ள
விடுவிடுவென
போதைக்குள் இறங்குகிறான்
முந்தைய போதைகளின்
மிச்சங்களும் சேர
தன்னைப் பெயர்த்து
எதிரில் உட்காரவைத்து
இன்னொருவருடன் பருகுவது போன்ற
தோற்றத்தைப் பெற்று
அமைதியின் ஆசிர்வாதம் கிடைத்ததாகச்
சொல்லிக்கொள்கிறான்
தன்னைக் கிளறும்
அழைப்பு மணிகளை
ஒவ்வொன்றாக
நிறுத்திக்கொண்டே வருகிறான்
கால்களின் நடனத்தில்
சிக்கி விழாமல்
கவனமாய் நடந்து
வெளியே வருபவன்
மழையைத்திட்டியபடி
நனைந்து
எதிரே போய்
ஒதுங்கி நின்று
பார்த்தபடியே இருக்கிறான்
மழைத் திரையிட்ட
மதுபானக்கடையை
Friday, February 15, 2008
கோடுகளின் இசை
வெள்ளைத் தாளைப்
பருகுவதுபோல் பூனை
பிரியம் கூடி
பூனையிடம் கேட்டேன்
உன்னை வரைந்தவரைப்
பார்க்க வேண்டும்
சின்ன சத்தங்கள் செய்தபடி
அழைத்துப்போய்
வரைந்தவரைக் காட்டியது
சூரியன் இறங்கிய
ஒளிவெளியில்
அமர்ந்திருந்தார்
கண்கள் புன்னகைக்க
வரைவதைப் பார்க்கச் சொன்னார்
பியானோவும் ஏழைச்சிறுவனும்
பார்த்தபடியே
மெல்ல இமைமூட
கேட்டது
கோடுகளின் இசை
கண்டெடுத்த
குழந்தை மனநிலையில்
கண் திறக்க
பூனை இல்லை
பியானோ காணோம்
வாசித்த சிறுவனும் இல்லை
வரைந்தவரும்
கேட்டபடி இருந்தது
நின்று போகாத
பூனையின் சத்தம்
(ஓவியர் ஆதிமூலம் நினைவிற்கு)
பருகுவதுபோல் பூனை
பிரியம் கூடி
பூனையிடம் கேட்டேன்
உன்னை வரைந்தவரைப்
பார்க்க வேண்டும்
சின்ன சத்தங்கள் செய்தபடி
அழைத்துப்போய்
வரைந்தவரைக் காட்டியது
சூரியன் இறங்கிய
ஒளிவெளியில்
அமர்ந்திருந்தார்
கண்கள் புன்னகைக்க
வரைவதைப் பார்க்கச் சொன்னார்
பியானோவும் ஏழைச்சிறுவனும்
பார்த்தபடியே
மெல்ல இமைமூட
கேட்டது
கோடுகளின் இசை
கண்டெடுத்த
குழந்தை மனநிலையில்
கண் திறக்க
பூனை இல்லை
பியானோ காணோம்
வாசித்த சிறுவனும் இல்லை
வரைந்தவரும்
கேட்டபடி இருந்தது
நின்று போகாத
பூனையின் சத்தம்
(ஓவியர் ஆதிமூலம் நினைவிற்கு)
Tuesday, January 29, 2008
சிதையும் சொற்கள்
மறையும் சூரியன்
கவிதையில் உதிப்பது
அழகாய் இருக்கிறது
ஆனாலும்
சொற்களைச் சிதைக்கிறது
சுள்ளிப் பொறுக்கும் கிழவி
வீடு சேர வேண்டும்
என்ற யோசனை
கிழவியைப் பின்தள்ளிப்
போகிறது ரயில்
சத்தலயம் பிசகாமல்
கவிதையில் உதிப்பது
அழகாய் இருக்கிறது
ஆனாலும்
சொற்களைச் சிதைக்கிறது
சுள்ளிப் பொறுக்கும் கிழவி
வீடு சேர வேண்டும்
என்ற யோசனை
கிழவியைப் பின்தள்ளிப்
போகிறது ரயில்
சத்தலயம் பிசகாமல்
Monday, January 21, 2008
மணக்கும் இசை
நிரம்பி வழியும்
அரங்கிலிருந்து
மணக்கிறது இசை
என் அளவுக்கு
சுவாசிக்கத் துவங்குகையில்
பூக்கும் சில பூக்கள்
ஆடுகின்றன
ஒலி லயத்திற்கு ஏற்ப
(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)
அரங்கிலிருந்து
மணக்கிறது இசை
என் அளவுக்கு
சுவாசிக்கத் துவங்குகையில்
பூக்கும் சில பூக்கள்
ஆடுகின்றன
ஒலி லயத்திற்கு ஏற்ப
(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)
Sunday, January 20, 2008
நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்...
எனது கதையில்
வரும் கிழவி
உங்கள் ஊருக்கு வந்தால்
ஏதாவது கொடுங்கள்
சர்க்கரை குறைவான காப்பி
வேகவைத்த கடலை
ஒரு குவளை கஞ்சி
ரசம் சாதம்
முடியாவிட்டால் வெந்நீர்
அவள் சொல்வதைக்
கேட்க முடியாதபோது
ஒரு புன்னகைக் கொடுத்து
அனுப்பி விடுங்கள்
சிறு வயதில் இறந்த பேரன்
வெளிநாடு போய்
திரும்பாத மகன்
நிலங்களைத் தொலைத்தக் குடும்பம்
என உண்டு அவளிடம்
கண்ணீர் உடைக்கும் கதைகள்
நதி பார்த்தால்
நின்று விடுவாள் கிழவி
அவளை இறக்கி விடாதீர்கள்
நீச்சல் தெரியாது
கிழவிக்கு
எந்த சேதாரமும் நேராமல்
உடனே அனுப்பி வையுங்கள்
கதையின் நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்
கிழவிக்கு மரணம் நிகழ்ந்தாக வேண்டும்
நீரில் மூழ்கி
வரும் கிழவி
உங்கள் ஊருக்கு வந்தால்
ஏதாவது கொடுங்கள்
சர்க்கரை குறைவான காப்பி
வேகவைத்த கடலை
ஒரு குவளை கஞ்சி
ரசம் சாதம்
முடியாவிட்டால் வெந்நீர்
அவள் சொல்வதைக்
கேட்க முடியாதபோது
ஒரு புன்னகைக் கொடுத்து
அனுப்பி விடுங்கள்
சிறு வயதில் இறந்த பேரன்
வெளிநாடு போய்
திரும்பாத மகன்
நிலங்களைத் தொலைத்தக் குடும்பம்
என உண்டு அவளிடம்
கண்ணீர் உடைக்கும் கதைகள்
நதி பார்த்தால்
நின்று விடுவாள் கிழவி
அவளை இறக்கி விடாதீர்கள்
நீச்சல் தெரியாது
கிழவிக்கு
எந்த சேதாரமும் நேராமல்
உடனே அனுப்பி வையுங்கள்
கதையின் நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்
கிழவிக்கு மரணம் நிகழ்ந்தாக வேண்டும்
நீரில் மூழ்கி
Thursday, January 10, 2008
சிறுமியின் மரம்
தாத்தாவுடன்
வாக்கிங் போய்விட்டு
வந்த பேத்தி
அவர் கால் கழுவி வருவதற்குள்
வரைந்ததைக் காட்டினாள்
பேத்தியின் பிஞ்சு கிறுக்கலில்
நிமிர்ந்து நின்றது
ஒரு மரம்
கன்னத்தைத் தட்டி
பாராட்டு சொன்ன
தாத்தாவைக் கேட்டாள் சிறுமி
இது எந்த மரம் சொல்லுங்க
விழித்து நின்ற தாத்தாவுக்கு
விடை சொன்னாள்
நடந்து போனப்ப
நாம பாத்தமே
நீங்க கூட சொன்னீங்களே
இது புயல்ல சாஞ்ச மரம்னு
அதுதான் தாத்தா இது
நான் நிக்க வச்சிருக்கேன்
வாக்கிங் போய்விட்டு
வந்த பேத்தி
அவர் கால் கழுவி வருவதற்குள்
வரைந்ததைக் காட்டினாள்
பேத்தியின் பிஞ்சு கிறுக்கலில்
நிமிர்ந்து நின்றது
ஒரு மரம்
கன்னத்தைத் தட்டி
பாராட்டு சொன்ன
தாத்தாவைக் கேட்டாள் சிறுமி
இது எந்த மரம் சொல்லுங்க
விழித்து நின்ற தாத்தாவுக்கு
விடை சொன்னாள்
நடந்து போனப்ப
நாம பாத்தமே
நீங்க கூட சொன்னீங்களே
இது புயல்ல சாஞ்ச மரம்னு
அதுதான் தாத்தா இது
நான் நிக்க வச்சிருக்கேன்
Wednesday, December 26, 2007
நான்...
நான்
நான்
நான் நான் என்று
நுரைத்துப் பொங்க
நான்களைச்
சேமித்துவைத்தேன்
குறைவின்றி
கூடித்திமிறி
குதித்தாடி வெளியேறின
ஒருநாள் எல்லாம்
என்னை
உடைத்துப்போட்டு
(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)
நான்
நான் நான் என்று
நுரைத்துப் பொங்க
நான்களைச்
சேமித்துவைத்தேன்
குறைவின்றி
கூடித்திமிறி
குதித்தாடி வெளியேறின
ஒருநாள் எல்லாம்
என்னை
உடைத்துப்போட்டு
(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)
Subscribe to:
Posts (Atom)