மிதந்தது பூ
காற்றில் அசைந்தது
நதியின்
அலைவுக்கேற்ப
நடனம் நிகழ்ந்தது
மிதந்தது பூ
மிதந்த பூ
படகானது
படகில்
இளைப்பாறிப்போனது
பறவை
பறவை சத்தம் கேட்டு
மீன்கள் வெளிகுதித்து
படகின் சுவரோரம்
முதுகுரசிப் போயின
இப்போது
அதே பூ
படகின் மேல்
கதிர்தீண்ட
ஒளித் திவளைகளுடன்
பார்த்தது
படகோட்டி
பூவை வணங்குகிறான்
மெதுவாய் எடுத்து
படகில் அமர்ந்திருக்கும்
இளவரசி தோற்றம்கொண்ட
பெண்ணிடம் பணிவுடன்
தருகிறான்
அதிசயத்தைப் போல
அவள் வாங்கி
முகர்ந்து
ரசித்து
கூந்தலில் வைக்கிறாள்
மெல்லத் தொடுகிறாள்
படகோட்டி
படகை வேகமாக்குகிறான்
பாய்ந்து வரும் காற்று
படகை
படகோட்டியை
அவளை
அவள் கூந்தலை
அவள் பூவைத்
தீண்டுகிறது
தலையிலிருந்து
நதி விழுவதுபோல்
நதியில்
விழுகிறது பூ
விழும் லாவகத்தில்
சில இதழ்கள்
தனியாகின்றன
முதலில்
மிதந்தது போலவே
இப்போது
மிதக்கிறது பூ
அலையின்
அசைவை வாங்கி
அசைகிறது
தொலைவாகும் படகை
அதிலிருந்து
தன்னை பார்த்து
கையசைக்கும் பெண்ணை
பார்த்தபடி
மிதக்கிறது பூ
Saturday, February 19, 2011
Friday, February 18, 2011
முடிவுகள்
நீ உண்ணும்
இந்தத் தூக்க மாத்திரைகள்
உன்னை
ஆழ்ந்த
மிக ஆழ்ந்த
உறக்கத்திற்கு
இட்டுச் செல்லும்
அதன் பிறகு
நீதான்
முடிவு செய்யவேண்டும்
இதை
தற்கொலையாக
மாற்றப்போகிறாயா
என்பதையும்
இல்லை
இது ஒரு
தற்செயல் என
முடிவு செய்து
வாழ்க்கைக்குத்
திரும்ப போகிறாயா
என்பதையும்
இந்தத் தூக்க மாத்திரைகள்
உன்னை
ஆழ்ந்த
மிக ஆழ்ந்த
உறக்கத்திற்கு
இட்டுச் செல்லும்
அதன் பிறகு
நீதான்
முடிவு செய்யவேண்டும்
இதை
தற்கொலையாக
மாற்றப்போகிறாயா
என்பதையும்
இல்லை
இது ஒரு
தற்செயல் என
முடிவு செய்து
வாழ்க்கைக்குத்
திரும்ப போகிறாயா
என்பதையும்
Thursday, February 17, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
373-
கண்ணீர்
கவலையின் திரவமாகவும்
காயத்தின் மருந்தாகவும்
374-
ஓய்வே
உழைக்கச் சொல்கிறது
375-
இரவின் விளிம்பில்
வழியும்
கனவு
கண்ணீர்
கவலையின் திரவமாகவும்
காயத்தின் மருந்தாகவும்
374-
ஓய்வே
உழைக்கச் சொல்கிறது
375-
இரவின் விளிம்பில்
வழியும்
கனவு
Wednesday, February 16, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
370-
அன்பை விநியோகிக்கவே
வந்தோம்
ஆயுதத்தை
தூக்க வைத்தீர்கள்
371-
எப்படி முடியும்
இந்த கவிதை
தெரியாது
எனக்கும்
கவிதைக்கும்
372-
யாருடனும்
போட்டியிட விரும்பாதவன்
தன்னிடமே
தோற்றுவிடுவான்.
அன்பை விநியோகிக்கவே
வந்தோம்
ஆயுதத்தை
தூக்க வைத்தீர்கள்
371-
எப்படி முடியும்
இந்த கவிதை
தெரியாது
எனக்கும்
கவிதைக்கும்
372-
யாருடனும்
போட்டியிட விரும்பாதவன்
தன்னிடமே
தோற்றுவிடுவான்.
சிறுமீன்
அடுக்கி வைத்துவிட்டுப்போன
வார்த்தைகளை
திரும்பவந்து
கலைத்தது குழந்தை
கலைத்த கடலுக்குள்
நீந்தும் சிறுமீன்
நான்
வார்த்தைகளை
திரும்பவந்து
கலைத்தது குழந்தை
கலைத்த கடலுக்குள்
நீந்தும் சிறுமீன்
நான்
Sunday, February 13, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
364-
எல்லாமே
தொடர்ந்து வரவேண்டும்
எல்லாவற்றையும்
தொடந்து செல்லவேண்டும்
தவிர்க்க வேண்டும்
இந்த நினைவை
365-
மீன்தொட்டியில்
ஊற்றுகிறாள் குழந்தை
கொண்டுவந்த கடலை
366-
கதவடைக்கிறாய்
சாவிதுவாரத்தில்
பரவும் ஒளி
திறக்கப் பார்க்கிறது
உன் இருளை
367-
இந்தப் பள்ளத்தாக்கு
கடவுள் ஊற்றிய
வண்ணங்களால்
நிரம்பி இருக்கிறது
368-
வழி தப்பும் ஆடுகளாய்
நினைவுகள் போகும்
விரட்டிப் பிடித்தாலும்
வேறிடம் மாறும்
369-
தெரிந்தே
தொலைந்திருக்கிறேன்
தேடாதீர்கள்
எல்லாமே
தொடர்ந்து வரவேண்டும்
எல்லாவற்றையும்
தொடந்து செல்லவேண்டும்
தவிர்க்க வேண்டும்
இந்த நினைவை
365-
மீன்தொட்டியில்
ஊற்றுகிறாள் குழந்தை
கொண்டுவந்த கடலை
366-
கதவடைக்கிறாய்
சாவிதுவாரத்தில்
பரவும் ஒளி
திறக்கப் பார்க்கிறது
உன் இருளை
367-
இந்தப் பள்ளத்தாக்கு
கடவுள் ஊற்றிய
வண்ணங்களால்
நிரம்பி இருக்கிறது
368-
வழி தப்பும் ஆடுகளாய்
நினைவுகள் போகும்
விரட்டிப் பிடித்தாலும்
வேறிடம் மாறும்
369-
தெரிந்தே
தொலைந்திருக்கிறேன்
தேடாதீர்கள்
Saturday, February 12, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
359-
கண்மூடித்
தூங்குவது போல்
நடித்தேன்
எழுப்பினார்கள்
கண்மூடி
தவமிருப்பதுபோல்
நடித்தேன்
எழுப்பச் சொல்கிறார்கள்
360-
உள் நெளியும் இருள்
வழி காட்டும்
வழியெல்லாம் ஒளி
தலையாட்டும்
361-
போனபின்னும்
முளைத்திருப்பேன்
உங்களில்
ஒருவரைப் போல
362-
கல்லெறிய
சொல்லெறிந்து
போனது காகம்
363-
திருத்திக்கொள்ளலாம்
எழுதுங்கள
தேடிக்கொள்ளலாம்
தொலையுங்கள்
கண்மூடித்
தூங்குவது போல்
நடித்தேன்
எழுப்பினார்கள்
கண்மூடி
தவமிருப்பதுபோல்
நடித்தேன்
எழுப்பச் சொல்கிறார்கள்
360-
உள் நெளியும் இருள்
வழி காட்டும்
வழியெல்லாம் ஒளி
தலையாட்டும்
361-
போனபின்னும்
முளைத்திருப்பேன்
உங்களில்
ஒருவரைப் போல
362-
கல்லெறிய
சொல்லெறிந்து
போனது காகம்
363-
திருத்திக்கொள்ளலாம்
எழுதுங்கள
தேடிக்கொள்ளலாம்
தொலையுங்கள்
Friday, February 11, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
357-
கண்ணாடியில்
பார்த்த அழுக்கைத்
துடைக்க துடைக்க
அழியாமல் தெரிந்தது
என் அழுக்கு
358-
நீங்கள் நல்லவரா என்று
எனக்குத் தெரியாது
நீங்கள் நல்லவரா என்று
உங்களுக்குத் தெரியுமா
கண்ணாடியில்
பார்த்த அழுக்கைத்
துடைக்க துடைக்க
அழியாமல் தெரிந்தது
என் அழுக்கு
358-
நீங்கள் நல்லவரா என்று
எனக்குத் தெரியாது
நீங்கள் நல்லவரா என்று
உங்களுக்குத் தெரியுமா
Thursday, February 10, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
354-
வேரிலிருந்து
கிளைக்குத் தாவும்
மரம்
355-
முன்வலி போலில்லை
இவ்வலி
தடவிக்கொள்ளும் ஆறுதல்
குறைக்கப் பார்க்கும்
வலியின் வலியை
356-
மெளனம் என்பது
சத்தமில்லாதிருத்தல் அல்ல
சத்தத்தின் கரையில்
பூத்திருத்தல்
வேரிலிருந்து
கிளைக்குத் தாவும்
மரம்
355-
முன்வலி போலில்லை
இவ்வலி
தடவிக்கொள்ளும் ஆறுதல்
குறைக்கப் பார்க்கும்
வலியின் வலியை
356-
மெளனம் என்பது
சத்தமில்லாதிருத்தல் அல்ல
சத்தத்தின் கரையில்
பூத்திருத்தல்
நுழைவாயில்
அந்த கவிதையை
அழித்து விடுங்கள்
மெல்ல
ரப்பருக்கு எதுவும்
தீங்கு நேராமல்
இல்லை
எரித்து விடுங்கள்
ஒரு தீக்குச்சியில்
எல்லாம் முடித்துவிடும்
அந்த கவிதை
இன்னும் உங்களில்
கனக்குமெனில்
மறுபடி
எழுதிப் பாருங்கள்
வேறு ஆழத்திலிருந்து
வேறு தளத்திலிருந்து
வேறு ஒன்றிலிருந்து
வாந்தி எடுப்பதுபோல்
அதுவே
வந்து சேருமெனில்
தயங்காதீர்கள்
அதையும்
முன்சொன்னதுப்போல்
செய்துவிடுங்கள்
அழிக்க வேண்டியதை
ஆக்கிக்கொண்டிருப்பதால்
எந்த பலனும் இல்லை
பேசாமல்
வார்த்தைகளற்ற
வெளியில் பயணித்துத்
தேடுங்கள்
உடனே
திரும்பி விடாதீர்கள்
ஓடோடி வந்து
தாளில் அப்பிவிடுவதால்
ஒன்றும் நிகழ்ந்துவிடாது
சரியான சமிக்ஞை
கிடைக்குமெனில்
அப்போது எழுதுங்கள்
சிக்கி இருப்பதே
வருமெனில்
நீங்கள்
அடைபட்ட கூண்டிலிருந்து
இன்னும் வெளிவரவில்லை
என்று பொருளாகும்
காத்திருங்கள்
மெளனம் பழகுங்கள்
வார்த்தைகள் ஊடாக
உயிர் நுழைத்துப் பாருங்கள்
பிறகு எழுதுங்கள்
இந்த தொடர்ந்த
செயல்பாடுகளில்
ஒன்று நீங்கள்
முடிந்துபோய்விடுவீர்கள்
அல்லது
கவிதையின்
ஒரு புதிய நுழைவாயிலை
கண்டடைவீர்கள்
அழித்து விடுங்கள்
மெல்ல
ரப்பருக்கு எதுவும்
தீங்கு நேராமல்
இல்லை
எரித்து விடுங்கள்
ஒரு தீக்குச்சியில்
எல்லாம் முடித்துவிடும்
அந்த கவிதை
இன்னும் உங்களில்
கனக்குமெனில்
மறுபடி
எழுதிப் பாருங்கள்
வேறு ஆழத்திலிருந்து
வேறு தளத்திலிருந்து
வேறு ஒன்றிலிருந்து
வாந்தி எடுப்பதுபோல்
அதுவே
வந்து சேருமெனில்
தயங்காதீர்கள்
அதையும்
முன்சொன்னதுப்போல்
செய்துவிடுங்கள்
அழிக்க வேண்டியதை
ஆக்கிக்கொண்டிருப்பதால்
எந்த பலனும் இல்லை
பேசாமல்
வார்த்தைகளற்ற
வெளியில் பயணித்துத்
தேடுங்கள்
உடனே
திரும்பி விடாதீர்கள்
ஓடோடி வந்து
தாளில் அப்பிவிடுவதால்
ஒன்றும் நிகழ்ந்துவிடாது
சரியான சமிக்ஞை
கிடைக்குமெனில்
அப்போது எழுதுங்கள்
சிக்கி இருப்பதே
வருமெனில்
நீங்கள்
அடைபட்ட கூண்டிலிருந்து
இன்னும் வெளிவரவில்லை
என்று பொருளாகும்
காத்திருங்கள்
மெளனம் பழகுங்கள்
வார்த்தைகள் ஊடாக
உயிர் நுழைத்துப் பாருங்கள்
பிறகு எழுதுங்கள்
இந்த தொடர்ந்த
செயல்பாடுகளில்
ஒன்று நீங்கள்
முடிந்துபோய்விடுவீர்கள்
அல்லது
கவிதையின்
ஒரு புதிய நுழைவாயிலை
கண்டடைவீர்கள்
Wednesday, February 09, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
351-
இதோடு
இந்த ஆட்டத்தை
முடித்துக்கொள்ளலாம்
இரண்டுபேரும்
வெற்றிபெற்றதாக
அல்லது
இருவரும் தோற்றுவிட்டதாக
அறிவித்துவிடலாம்
352-
ஓங்கிய வாள்
பயணம் செய்யும்
காலம் கிழித்து
353-
இங்கு எல்லாமே
ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன
ஒழுங்கற்று
நுழைவீர் எனில்
சவமாய் வெளியேறுவீர்கள்
இதோடு
இந்த ஆட்டத்தை
முடித்துக்கொள்ளலாம்
இரண்டுபேரும்
வெற்றிபெற்றதாக
அல்லது
இருவரும் தோற்றுவிட்டதாக
அறிவித்துவிடலாம்
352-
ஓங்கிய வாள்
பயணம் செய்யும்
காலம் கிழித்து
353-
இங்கு எல்லாமே
ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன
ஒழுங்கற்று
நுழைவீர் எனில்
சவமாய் வெளியேறுவீர்கள்
சக்கர நாற்காலியில் உறங்கும் பூனை
சக்கர நாற்காலியில்
உறங்கும் பூனையை
வரைந்த ஓவியர்
மதிய களைப்பில்
சற்று கண்மூடினார்
வெயில்பட
கண் விழித்தது பூனை
உறங்கியவரைப் பார்த்தது
நிறங்களை முகர்ந்தது
பாய்ந்து
ஓடிப்போக எழ
சக்கர நாற்காலி
மெல்ல நகர
வந்த ஒலிகேட்டு
முன்போலவே
கண் மூடியது
ஜன்னல் மோத
எழுந்த ஓவியர்
பூனைமேல் விழுந்த
வெயிலை மூடி
வண்ணங்கள் எடுத்து
பூனைக்கு இன்னும்
உயிரேற்றத் தொடங்கினார்
உறங்கும் பூனையை
வரைந்த ஓவியர்
மதிய களைப்பில்
சற்று கண்மூடினார்
வெயில்பட
கண் விழித்தது பூனை
உறங்கியவரைப் பார்த்தது
நிறங்களை முகர்ந்தது
பாய்ந்து
ஓடிப்போக எழ
சக்கர நாற்காலி
மெல்ல நகர
வந்த ஒலிகேட்டு
முன்போலவே
கண் மூடியது
ஜன்னல் மோத
எழுந்த ஓவியர்
பூனைமேல் விழுந்த
வெயிலை மூடி
வண்ணங்கள் எடுத்து
பூனைக்கு இன்னும்
உயிரேற்றத் தொடங்கினார்
Tuesday, February 08, 2011
ஒற்றை வாக்கியம்
ஒற்றை வாக்கியத்தை
சிதைக்க வந்தவனிடம்
ஒரு நொடி
அதைப் படித்துவிட்டு
அழித்துக்கொள் என்றேன்
படித்துக்கொண்டிருக்கிறான்
இன்னும்
முடித்தபாடில்லை
பக்கத்தில்
துரு ஏறிக்கொண்டிருக்கிறது
அவன் ஆயுதம்
சிதைக்க வந்தவனிடம்
ஒரு நொடி
அதைப் படித்துவிட்டு
அழித்துக்கொள் என்றேன்
படித்துக்கொண்டிருக்கிறான்
இன்னும்
முடித்தபாடில்லை
பக்கத்தில்
துரு ஏறிக்கொண்டிருக்கிறது
அவன் ஆயுதம்
Monday, February 07, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
348-
ஒரே ஒரு
கண்ணீர்த்துளியோடு
உங்கள் அழுகையை
முடித்துக் கொள்ளமுடியுமா
வாய்விட்டுச் சிரிக்கிறேன்
வரும் ஒரு துளியோடு
நிறைவடைகிறது
நீங்கள் கேட்பது
349-
என் தியானம் கலைத்து
உள்ளிறங்குகிறது
ஒரு கல்
தன் தியான
இடம் தேடி
350-
கையிலிருந்த
ஆணியை அறைய
இறங்கிக்கொண்டிருந்தது
சுவரிலும் வானிலும்
ஒரே ஒரு
கண்ணீர்த்துளியோடு
உங்கள் அழுகையை
முடித்துக் கொள்ளமுடியுமா
வாய்விட்டுச் சிரிக்கிறேன்
வரும் ஒரு துளியோடு
நிறைவடைகிறது
நீங்கள் கேட்பது
349-
என் தியானம் கலைத்து
உள்ளிறங்குகிறது
ஒரு கல்
தன் தியான
இடம் தேடி
350-
கையிலிருந்த
ஆணியை அறைய
இறங்கிக்கொண்டிருந்தது
சுவரிலும் வானிலும்
Sunday, February 06, 2011
ஒரு சிறு கோடு
முன் திட்டம்
தயாராயிற்று
புத்திசாலித்தனமாக
வீழ்த்த வேண்டும்
ஓவியரை
அணுகினேன்
உங்களிடமிருந்து
எனக்கு ஒரு
சிறு கோடு மட்டும் போதும்
ஓவியம் எதுவும் வேண்டாம்
குவிந்துப் பார்த்தார்
அப்போது வரைந்திருந்த
காளிரூபம் கொண்ட பெண்ணின்
ஒரு பகுதியைக்
கிழித்துத் தந்தார்
அதிலிருந்தது
கோடு
நேராய்
வளைவாய்
பலவாய்
பிறகு போய்விட்டார்
தன் வண்ணங்களின்
குகைக்குள்
ஒரு கணம் நின்று
நடந்தேன்
என் கையில்
கோடும்
அதில் கனக்கும் பெண்ணும்
தயாராயிற்று
புத்திசாலித்தனமாக
வீழ்த்த வேண்டும்
ஓவியரை
அணுகினேன்
உங்களிடமிருந்து
எனக்கு ஒரு
சிறு கோடு மட்டும் போதும்
ஓவியம் எதுவும் வேண்டாம்
குவிந்துப் பார்த்தார்
அப்போது வரைந்திருந்த
காளிரூபம் கொண்ட பெண்ணின்
ஒரு பகுதியைக்
கிழித்துத் தந்தார்
அதிலிருந்தது
கோடு
நேராய்
வளைவாய்
பலவாய்
பிறகு போய்விட்டார்
தன் வண்ணங்களின்
குகைக்குள்
ஒரு கணம் நின்று
நடந்தேன்
என் கையில்
கோடும்
அதில் கனக்கும் பெண்ணும்
Wednesday, February 02, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
342-
பிஞ்சு ஒளி
நிரம்பி வழியும்
தேநீர் கோப்பையில்
343-
கனவில்
வருகிற கனவுகளை
பார்ப்பது எந்நாள்
344-
சுடர் பெயர்ந்து
போனது காற்றோடு
இருள் இருந்து
பேசுது என்னோடு
345-
என் இலையில்
பசியைப் பரிமாறியது
யார்
346-
மன்னிக்கவும்
உங்கள் வார்த்தைகளில்
சத்தம் மட்டுமே
அர்த்தம் இல்லை
347-
இருள் மெளனம்
என்று தோன்றியது
இருள் கழிந்தது
மெளனம் விட்டு
பிஞ்சு ஒளி
நிரம்பி வழியும்
தேநீர் கோப்பையில்
343-
கனவில்
வருகிற கனவுகளை
பார்ப்பது எந்நாள்
344-
சுடர் பெயர்ந்து
போனது காற்றோடு
இருள் இருந்து
பேசுது என்னோடு
345-
என் இலையில்
பசியைப் பரிமாறியது
யார்
346-
மன்னிக்கவும்
உங்கள் வார்த்தைகளில்
சத்தம் மட்டுமே
அர்த்தம் இல்லை
347-
இருள் மெளனம்
என்று தோன்றியது
இருள் கழிந்தது
மெளனம் விட்டு
பறவையின் பெயர்
என் பெயர் சொல்லி
கூப்பிட்டது பறவை
எப்படி என் பெயர்
தெரியும் என்றேன்
ஆச்சர்யத்துடன்
நீயேதான்
சொன்னாய் என்றது
எங்கு
எப்படி
நீ ஒரு மரத்தை
கனவு கண்டபோது
அதன் கிளையில்
நான் வந்து அமர்ந்தேன்
அப்போது
விழுந்தது பழம்
நீ அதை எடுத்து
சுவைத்தபடி
உன் பெயர்சொல்லி
என் பெயர் கேட்டாய்
நீயே ஏதாவது
வைத்துக்கொள்
எனச்சொல்லிவிட்டு
பறந்துபோனேன் என்றது
அப்போது யோசித்த பெயரை
சொல்லி கூப்பிடுவதற்குள்
இப்போதும்
பறந்து போயிருந்தது
கூப்பிட்டது பறவை
எப்படி என் பெயர்
தெரியும் என்றேன்
ஆச்சர்யத்துடன்
நீயேதான்
சொன்னாய் என்றது
எங்கு
எப்படி
நீ ஒரு மரத்தை
கனவு கண்டபோது
அதன் கிளையில்
நான் வந்து அமர்ந்தேன்
அப்போது
விழுந்தது பழம்
நீ அதை எடுத்து
சுவைத்தபடி
உன் பெயர்சொல்லி
என் பெயர் கேட்டாய்
நீயே ஏதாவது
வைத்துக்கொள்
எனச்சொல்லிவிட்டு
பறந்துபோனேன் என்றது
அப்போது யோசித்த பெயரை
சொல்லி கூப்பிடுவதற்குள்
இப்போதும்
பறந்து போயிருந்தது
நான் மட்டுமே
இந்த அறையில்
நான் மட்டுமே
இருக்கிறேன்
இந்த கவிதையை
நான் மட்டுமே
வாசிக்கிறேன்
இந்த இச்சையை
நான் மட்டுமே
தீர்க்கிறேன்
இந்த அமைதியை
நான் மட்டுமே
கேட்கிறேன்
இந்த சுவரை
நான் மட்டுமே
உடைக்கிறேன்
இந்த மதுவில்
நான் மட்டுமே
கலக்கிறேன்
இந்த கண்ணீரை
நான் மட்டுமே
கடக்கிறேன்
இந்த ஒப்பனையை
நான் மட்டுமே
கலைக்கிறேன்
இந்த வேட்டையை
நான் மட்டுமே
நடத்துகிறேன்
இந்த காயங்களை
நான் மட்டுமே
மறைக்கிறேன்
இந்த சதுரங்கத்தை
நான் மட்டுமே
ஆடுகிறேன்
இந்த பிம்பங்களை
நான் மட்டுமே
சிதைக்கிறேன்
இந்த பறவையை
நான் மட்டுமே
அழைக்கிறேன்
இந்த தானியங்களை
நான் மட்டுமே
இறைக்கிறேன்
இந்தத் தடயங்களை
நான் மட்டுமே
அழிக்கிறேன்
இந்த கூட்டத்தில்
நான் மட்டுமே
வெளியேறுகிறேன்
இந்த கூண்டை
நான் மட்டுமே
திறக்கிறேன்
இந்த மிருகத்தை
நான் மட்டுமே
அனுப்புகிறேன்
இந்த கடிகாரத்தை
நான் மட்டுமே
நிறுத்துகிறேன்
இந்த இருளில்
நான் மட்டுமே
நடக்கிறேன்
இந்த உச்சத்தில்
நான் மட்டுமே
நிற்கிறேன்
இந்த நெருப்பை
நான் மட்டுமே
தீண்டுகிறேன்
இந்த விஷத்தை
நான் மட்டுமே
துப்புகிறேன்
இந்த விசாரணையை
நான் மட்டுமே
நடத்துகிறேன்
இந்த மாத்திரைகளை
நான் மட்டுமே
உண்கிறேன்
இந்த அறையில்
நான் மட்டுமே
இருக்கிறேன்
இந்த அறையில்
நான் மட்டுமே
இறக்கிறேன்
நான் மட்டுமே
இருக்கிறேன்
இந்த கவிதையை
நான் மட்டுமே
வாசிக்கிறேன்
இந்த இச்சையை
நான் மட்டுமே
தீர்க்கிறேன்
இந்த அமைதியை
நான் மட்டுமே
கேட்கிறேன்
இந்த சுவரை
நான் மட்டுமே
உடைக்கிறேன்
இந்த மதுவில்
நான் மட்டுமே
கலக்கிறேன்
இந்த கண்ணீரை
நான் மட்டுமே
கடக்கிறேன்
இந்த ஒப்பனையை
நான் மட்டுமே
கலைக்கிறேன்
இந்த வேட்டையை
நான் மட்டுமே
நடத்துகிறேன்
இந்த காயங்களை
நான் மட்டுமே
மறைக்கிறேன்
இந்த சதுரங்கத்தை
நான் மட்டுமே
ஆடுகிறேன்
இந்த பிம்பங்களை
நான் மட்டுமே
சிதைக்கிறேன்
இந்த பறவையை
நான் மட்டுமே
அழைக்கிறேன்
இந்த தானியங்களை
நான் மட்டுமே
இறைக்கிறேன்
இந்தத் தடயங்களை
நான் மட்டுமே
அழிக்கிறேன்
இந்த கூட்டத்தில்
நான் மட்டுமே
வெளியேறுகிறேன்
இந்த கூண்டை
நான் மட்டுமே
திறக்கிறேன்
இந்த மிருகத்தை
நான் மட்டுமே
அனுப்புகிறேன்
இந்த கடிகாரத்தை
நான் மட்டுமே
நிறுத்துகிறேன்
இந்த இருளில்
நான் மட்டுமே
நடக்கிறேன்
இந்த உச்சத்தில்
நான் மட்டுமே
நிற்கிறேன்
இந்த நெருப்பை
நான் மட்டுமே
தீண்டுகிறேன்
இந்த விஷத்தை
நான் மட்டுமே
துப்புகிறேன்
இந்த விசாரணையை
நான் மட்டுமே
நடத்துகிறேன்
இந்த மாத்திரைகளை
நான் மட்டுமே
உண்கிறேன்
இந்த அறையில்
நான் மட்டுமே
இருக்கிறேன்
இந்த அறையில்
நான் மட்டுமே
இறக்கிறேன்
Subscribe to:
Posts (Atom)