Tuesday, July 07, 2009

குழந்தை அருவி

தான் வரைந்ததைக் காட்டி
கேட்கிறாள் சிறுமி

அருவி என்கிறார் அப்பா

ஓவியத்தை மேல்கீழாக்கி
என்ன என்கிறாள்

இது தப்பு என்கிறார்

தலைகீழாய் யோகா
செய்யும் அருவி என்கிறாள்
சிரித்தபடி

தூக்கி கொஞ்சுகிறார் தந்தை
குழந்தை அருவியை

(ஜெஸிக்காவுக்கு)

*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது

9 comments:

  1. நன்றி தருமி
    ஜெஸிக்காவை நிறைய வரைய சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. நிச்சயமாக, ராஜா.

    அவளுக்காகக் கவிதை எழுதியதற்காக மிக்க நன்றி.........

    ReplyDelete
  3. தமிழ்பறவை
    உங்களின் தொடர்ந்த வாசிப்பிற்கும்
    எழுத்துக்கும் நன்றி

    ReplyDelete
  4. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  5. ஆகா அருமை, அழகு.

    ReplyDelete
  6. யாத்ராவுக்கு
    அன்பும் நன்றியும்

    ReplyDelete
  7. அழகான உணர்வு. அதை அழகுற வெளிப்படுத்தியிருக்கும் கவிதை. வாழ்த்துகள்

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete