Friday, January 20, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

826-

தனிமை
நிரம்பித் ததும்பும்
இந்த அறையில்
தனிமைக்குத்
துணையாய் நான்

827-

என் கால்களின் செவி
அறியும் ஒற்றைச் சொல்
செல்

828-

என்னைப்
பூட்டிவைத்துப் போகிறாய்
உனக்குத் தெரியாது
நான் புகைபோல கசிந்து
வெளியேறிவிடுவேன் என்று

829-

மெளனம் படர்ந்து
மெளனம் படர்ந்து
மெளனம் நாவாய் ஆனது

வார்த்தை மறந்து
வார்த்தை அழிந்து
மொழியே முடிந்து போனது

No comments:

Post a Comment