Saturday, August 14, 2010

வேர் கொண்டான்

மேடை ஏறி
பின் பக்கம் போய்
வேஷம் போட்டிருந்தவரை
உற்றுப் பார்த்து
அவர் கேட்டார்
நீங்க கந்தசாமிதானே

அவர் சொன்னார்
இந்த கதாபாத்திரத்தின் பேரு
வேர் கொண்டான்
அது மட்டும்தான்
இப்போது
எனக்குத் தெரியும்

1 comment:

  1. கொண்ட பணியில் ஒன்றிடுவதே வெற்றியைத் தருகிறது.

    ReplyDelete