Monday, October 05, 2009

இல்லாதது

இல்லாத ஒரு கவிதையை
இல்லாத ஒருவன் எழுத
இல்லாத மற்றொருவன் படிக்கிறான்
இல்லாத வேறொரு இடத்திலிருந்து

2 comments:

  1. அன்புள்ள ராஜா சந்திர சேகர்,

    உங்கள் கவிதைகள் நன்றாக உள்ளன. எளிய சொற்களின் வழியாக மீபொருண்மை தளத்திற்கு பயணிக்க முடிகிறது உங்களால் என்றென்னும் போது வியப்பாக உள்ளது. உதாரணம்: பூவிலிருந்து/பூக்களை கிள்ளி எறிகிறது/குழந்தை. மனதின் அசாதாரண கணங்களை கவனித்து எழுதுகிற நுண்மனம் வாய்ப்பது அபூர்வம். அநேகமாக இது போன்ற கவிதைகள்தான் உங்களின் மிகச்சிறந்த Core-mood ஆக இருக்க கூடும். தொடந்து இது போன்ற கவிதைகள் எழுதுங்கள் அது உங்கள் தனித்தன்மையாக இருக்கும்.

    ReplyDelete
  2. இல்லாத ஒரு கவிதையை
    இல்லாத ஒருவன் எழுத
    இல்லாத மற்றொருவன் படிக்கிறான்
    இல்லாத வேறொரு இடத்திலிருந்து

    அருமை. அருமை
    தங்கள் பல கவிதைகள் எளிமையாகவும், நுட்பமான சித்தரிப்புடனும் இருக்கின்றன

    நானும் இதே கருத்தில்
    நவீன விருட்சத்தில் ஒரு கவிதை எழுதியிருந்தேன்...

    இதுவரை யாரும் சொல்லாத
    கவிதையை
    எடுத்துக்கொண்டு
    திரும்பினேன்.
    அ‌ங்கே
    நீ இல்லை.
    நான் இல்லை.
    யாரும் இல்லை.
    எதுவும் இல்லை.
    எதுவுமற்ற அதுவும் இல்லை.

    ReplyDelete