Tuesday, October 20, 2009

பெயர்

நான் இல்லாத போது
பார்க்க வந்தவர்கள்
என் பெயரின் மேல்
நிறங்களைப் பூசி
சென்றனர்

ஒரு வண்ணத்தில்
அன்பு இருந்தது

ஒரு வண்ணத்தில்
கோபம் இருந்தது

பொறாமை,வருத்தம்,வன்மம்
இப்படி படிந்திருந்தன
நிறைய

ஒவ்வொன்றாய்
உரித்துப் பார்க்க
நிறமிழந்து போயிருந்தது
என் பெயர்

6 comments:

  1. கடைசி வரிகள் அருமை...

    ReplyDelete
  2. நிறமிழந்த பெயர் துணிவிழக்காமல் இருக்கட்டும்.

    சாந்தி

    ReplyDelete
  3. oops!அருமை,சந்திரா! நிறமற்ற தன்மை அற்புதம்.அசுவராஷ்யமாய் உரித்த பிறகே அதை பார்க்க வாய்க்கிறது.நம் பெயராகவே இருப்பினும் கூட!

    ReplyDelete
  4. one of the best poem I have read so far..congrats

    ReplyDelete
  5. விமர்சித்த நண்பர்களுக்கு நன்றி!

    ReplyDelete