Friday, April 27, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

881-

நகராத மனிதர்களைப் பார்த்து 
சொன்னது தேர் 
இந்த ஊரில் 
என்னையும் சேர்த்து 
எத்தனைத் தேர்கள்

882-

நான் மீனானது 
தெரியாமல் 
என்னைத் தூக்கி 
கடலில் எறிகிறீர்கள்
கரை ஒதுங்கி 
மிதப்பது 
உங்கள் ஏமாற்றம்தான்

883-

நீங்கள் துப்பிய 
எச்சியைத் துடைக்கிறேன் 
உங்கள் மேலிருந்து

884-

என் நான் 
தொலைந்து போயிற்று
இனி நான் 
நானின்றி இருக்கலாம்

885-

எதைஎதையோ 
செய்து கொண்டிருக்கிறேன்
எதை செய்ய வந்தேன் என்று 
மறந்து போயிற்று




1 comment:

  1. எதைஎதையோ
    செய்து கொண்டிருக்கிறேன்
    எதை செய்ய வந்தேன் என்று
    மறந்து போயிற்று// migavum arumaiyaana varigal .

    ReplyDelete