876-
மையப்படுத்தும் 
மையத்தில் 
இருக்க வேண்டும் 
என்பதே 
மெய்மையின் கோட்பாடு
877-
பயணத்தை 
சிறகில் வைத்திருக்கும் பறவை 
தூரத்தைக் 
கண்களில் வைத்திருக்கும்
878-
இறந்து போனவனை 
எழுப்பினேன் 
என்னை சாகடித்துவிட்டு 
நடந்து போனான்
879-
கிளை வழிகளிலும் 
பெரு வழிகளிலும் 
பயணித்து 
அடைந்தேன் 
என் வழியை
880-
துயரத்தைப் பாடிய பறவை 
பறந்துவிட்டது 
கிளையில் வழிகிறது மழை
No comments:
Post a Comment