Wednesday, March 07, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

871-

எறும்பின்
நிழல்
யானை போல்

872-

ஊஞ்சல் போல்
அசைகிறது
ஒற்றை வரி

873-

கை மணலில்
ஓடும்
சிறு நதி

874-

இருக்கும் இடத்திலேயே
இருக்கிறது
தேடிக்கொண்டிருப்பது

875-

நகர்ந்து போகும் வாழ்க்கை
நம்மை ஓடவிட்டுப்
பிடிக்கச் சொல்கிறது

1 comment: