Wednesday, February 03, 2010

கடல்

கடல் காட்டி
கடலில்
விளையாட்டுக் காட்டிய
அப்பாவின் அஸ்தியை
கரைத்தாயிற்று

குத்துகிறது
ஒரு துளி
கண்ணில்

பால்யம் குழைத்து
மறக்காமல் வா
விளையாட
அப்பாவும் நானும்
இருக்கிறோம்

சொல்லி அனுப்புகிறது
கடல்

(ராகவன் சித்தப்பாவின்
நினைவுக்கு)

3 comments:

  1. மனசை உலுக்குகிறது. முக்கியமாக அப்பாவை நேசிக்கும் மகன்கள் சொற்பம் என்பதால். மகன்களின் ஆதர்சம் அம்மாக்கள்தான்!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  2. //பால்யம் குழைத்து
    மறக்காமல் வா
    விளையாட
    அப்பாவும் நானும்
    இருக்கிறோம்//

    Fantastic Raja..!!!

    ReplyDelete
  3. வித்தியாசமான பார்வை

    ReplyDelete