388-
கண்ணீர்
எனது திரவ புன்னகை
என்றான்
யாராலும் அவனை
அழவைக்க
முடியவில்லை
389-
தயங்கி தயங்கி
சொல்ல நினைப்பவனை
கைவிடுகினறன
வார்த்தைகள்
தயங்காமல்
சொல்ல நினைப்பவனை
அழைத்துச் செல்கிறது
மொழி
390-
நுனி பிடித்து
நடக்கிறேன்
நுனி என்று
எதுவுமில்லை
நடக்கிறேன்
நுனி பிடித்து
எனை பிடித்து
391-
நீங்கள் சிந்திய சொல்
முள்ளாய்
விளைந்து கிடக்கிறது
சொல்லாமல்
சென்றுவிடுங்கள்
392-
அரங்கம் முழுதும்
பார்க்க வேண்டும்
மேடையில் நிற்கிறான்
மேடை பார்க்கிறது
அவனையும்
அரங்கையும்
Sunday, February 27, 2011
Saturday, February 26, 2011
திரும்பிக்கொண்டிருப்பவன்
போதை கூடி
நள்ளிரவில்
வீடு திரும்பிக்கொண்டிருப்பவன்
யார் யாரையோ சபிக்கிறான்
குழந்தைக்கு வாங்கிய
பொம்மை கீழே விழ
மிதித்துவிட்டுப் போகிறான்
நசுங்கிய பொம்மையின்
உயிர் கசிந்து அடங்குகிறது
பொம்மையை அள்ளியபடியே
ஓடிக்கொண்டிருக்கிறாள் மகள்
வழிமாறிச் செல்லும்
அப்பாவை கைபிடித்து
வீட்டிற்கு கூட்டிச் செல்ல
நள்ளிரவில்
வீடு திரும்பிக்கொண்டிருப்பவன்
யார் யாரையோ சபிக்கிறான்
குழந்தைக்கு வாங்கிய
பொம்மை கீழே விழ
மிதித்துவிட்டுப் போகிறான்
நசுங்கிய பொம்மையின்
உயிர் கசிந்து அடங்குகிறது
பொம்மையை அள்ளியபடியே
ஓடிக்கொண்டிருக்கிறாள் மகள்
வழிமாறிச் செல்லும்
அப்பாவை கைபிடித்து
வீட்டிற்கு கூட்டிச் செல்ல
Friday, February 25, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
383-
பூமிக்கு பாரமாக
நான் விட்டுப்போகும்
இந்த காலடித்தடங்களை
மன்னித்துவிடுங்கள்
384-
பொருளற்றது
என் வாழ்க்கை
சொல்லிச்செல்கிறான்
வழிப்போக்கன்
385-
என்னை
வழி நடத்தும்
நானை
வழி கடத்த
முடியாது
யாரும்
386-
சொல்
மேல்
சொல்
அதன்
மேல்
சொல்
சொல்
இப்படி
மேல்
மேல்
சொல்
சொல் என
அடுக்கி வைத்து
உச்சி நின்று
குதிக்கிறேன்
உடல் வாங்கிய
நீரலையில்
ஒதுங்குகிறது
ஒவ்வொரு
சொல்லும்
சத்தமற்று
387-
என்னைப் பார்த்து
நிராயுதபாணி என
முன்னேறாதீர்கள்
ஆழ்மனத்தின்
ஆழத்தில்
பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன
கத்திகள்
பூமிக்கு பாரமாக
நான் விட்டுப்போகும்
இந்த காலடித்தடங்களை
மன்னித்துவிடுங்கள்
384-
பொருளற்றது
என் வாழ்க்கை
சொல்லிச்செல்கிறான்
வழிப்போக்கன்
385-
என்னை
வழி நடத்தும்
நானை
வழி கடத்த
முடியாது
யாரும்
386-
சொல்
மேல்
சொல்
அதன்
மேல்
சொல்
சொல்
இப்படி
மேல்
மேல்
சொல்
சொல் என
அடுக்கி வைத்து
உச்சி நின்று
குதிக்கிறேன்
உடல் வாங்கிய
நீரலையில்
ஒதுங்குகிறது
ஒவ்வொரு
சொல்லும்
சத்தமற்று
387-
என்னைப் பார்த்து
நிராயுதபாணி என
முன்னேறாதீர்கள்
ஆழ்மனத்தின்
ஆழத்தில்
பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன
கத்திகள்
அவளுக்கு
துடைத்து துடைத்து
கண்ணாடியைப்
போட்டுப் பார்க்கிறாள்
மூதாட்டி
ஆனாலும்
உடைந்து உடைந்தே
தெரிகிறது உலகு
அவளுக்கு
கண்ணாடியைப்
போட்டுப் பார்க்கிறாள்
மூதாட்டி
ஆனாலும்
உடைந்து உடைந்தே
தெரிகிறது உலகு
அவளுக்கு
ஒற்றைச் சொல்
நீ எழுதிவைத்துவிட்டுப்
போயிருக்கும்
நன்றி என்ற
ஒற்றைச் சொல் மட்டுமே
இப்போது என்னிடமிருக்கிறது
ஒரு புத்தகத்திலிருக்கும்
மொத்த வாக்கியங்களைப் போல
அது கனக்கவும்
செய்கிறது
போயிருக்கும்
நன்றி என்ற
ஒற்றைச் சொல் மட்டுமே
இப்போது என்னிடமிருக்கிறது
ஒரு புத்தகத்திலிருக்கும்
மொத்த வாக்கியங்களைப் போல
அது கனக்கவும்
செய்கிறது
நுட்பம்
மிருதங்கம் வாசிப்பவரின்
விரல்களுக்கும்
வாத்தியத்துக்கும்
இடையில்
நீந்தும் இசை
அவர் காதுக்கு மட்டுமே
சென்று சேர்கிறது
காற்று
பிடிக்க நினைத்து
முடியாமல் போகிறது
பின் அந்த இசையை
அவர் வாசிக்கத் தொடங்குகிறார்
நமக்காக
இன்னும் நுட்பத்துடன்
விரல்களால்
இசையை செதுக்குவதைப்போல
விரல்களுக்கும்
வாத்தியத்துக்கும்
இடையில்
நீந்தும் இசை
அவர் காதுக்கு மட்டுமே
சென்று சேர்கிறது
காற்று
பிடிக்க நினைத்து
முடியாமல் போகிறது
பின் அந்த இசையை
அவர் வாசிக்கத் தொடங்குகிறார்
நமக்காக
இன்னும் நுட்பத்துடன்
விரல்களால்
இசையை செதுக்குவதைப்போல
Tuesday, February 22, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
377-
உங்கள் கண்ணீர்
உண்மையா
பொய்யா
நான் பொய்
கண்ணீர் உண்மை
378-
கிளையில் பறவை
தொங்க வந்தவன் ரசிக்கிறான்
அலகு கொத்துவதைப் பார்த்து
379-
பனிப்பாறை மேல்
படுத்திருந்தேன்
பாறை உருகுவதை நானும்
நான் உருகுவதை
பனியும் பார்த்தபடி
380-
ஒட்டடை
படிந்த தூரிகை
ஓவியத்தைப் பார்க்காது
381-
ஒத்திகை செய்யும் மரணம்
ஒருபோதும்
நேரத்தை சொல்வதில்லை
382-
விதியை
உருவாக்குபவர்களை
விதி ஒன்றும்
செய்வதில்லை
உங்கள் கண்ணீர்
உண்மையா
பொய்யா
நான் பொய்
கண்ணீர் உண்மை
378-
கிளையில் பறவை
தொங்க வந்தவன் ரசிக்கிறான்
அலகு கொத்துவதைப் பார்த்து
379-
பனிப்பாறை மேல்
படுத்திருந்தேன்
பாறை உருகுவதை நானும்
நான் உருகுவதை
பனியும் பார்த்தபடி
380-
ஒட்டடை
படிந்த தூரிகை
ஓவியத்தைப் பார்க்காது
381-
ஒத்திகை செய்யும் மரணம்
ஒருபோதும்
நேரத்தை சொல்வதில்லை
382-
விதியை
உருவாக்குபவர்களை
விதி ஒன்றும்
செய்வதில்லை
Monday, February 21, 2011
கடைசி வரி
கடைசி வரியில்
பட்டாம் பூச்சி பற்றிய
குறிப்பு இருந்தது
படிக்கும் போதே
பறந்து போனது
வியந்து பார்த்து
தாளுக்குத் திரும்ப
வரியும் காணாமல்
போயிருந்தது
பட்டாம் பூச்சி பற்றிய
குறிப்பு இருந்தது
படிக்கும் போதே
பறந்து போனது
வியந்து பார்த்து
தாளுக்குத் திரும்ப
வரியும் காணாமல்
போயிருந்தது
மிச்ச உயிர்
அன்பை ஆயுதமாக்கி
போர் முடித்து
வெளியேறுகிறாய்
சிந்திக்கிடக்கும்
குருதியிலிருக்கும்
மிச்ச உயிர்
துடித்து அடங்குகிறது
அனாதையாக
போர் முடித்து
வெளியேறுகிறாய்
சிந்திக்கிடக்கும்
குருதியிலிருக்கும்
மிச்ச உயிர்
துடித்து அடங்குகிறது
அனாதையாக
Sunday, February 20, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
376-
நீங்கள்
திறந்து காட்டச்சொல்லும்
இந்த பெட்டியில்
என் மரணம்
மட்டுமே இருக்கிறது
திறந்து காட்டுங்கள்
பாருங்கள்
ஒன்றுமில்லையே
அதையேதான்
நானும் சொன்னேன்
ஒன்றுமில்லாததுதான்
உங்கள் மரணமா
ஆமாம்
வாழ்க்கையும் கூட
நீங்கள்
திறந்து காட்டச்சொல்லும்
இந்த பெட்டியில்
என் மரணம்
மட்டுமே இருக்கிறது
திறந்து காட்டுங்கள்
பாருங்கள்
ஒன்றுமில்லையே
அதையேதான்
நானும் சொன்னேன்
ஒன்றுமில்லாததுதான்
உங்கள் மரணமா
ஆமாம்
வாழ்க்கையும் கூட
Saturday, February 19, 2011
மிதத்தல்
மிதந்தது பூ
காற்றில் அசைந்தது
நதியின்
அலைவுக்கேற்ப
நடனம் நிகழ்ந்தது
மிதந்தது பூ
மிதந்த பூ
படகானது
படகில்
இளைப்பாறிப்போனது
பறவை
பறவை சத்தம் கேட்டு
மீன்கள் வெளிகுதித்து
படகின் சுவரோரம்
முதுகுரசிப் போயின
இப்போது
அதே பூ
படகின் மேல்
கதிர்தீண்ட
ஒளித் திவளைகளுடன்
பார்த்தது
படகோட்டி
பூவை வணங்குகிறான்
மெதுவாய் எடுத்து
படகில் அமர்ந்திருக்கும்
இளவரசி தோற்றம்கொண்ட
பெண்ணிடம் பணிவுடன்
தருகிறான்
அதிசயத்தைப் போல
அவள் வாங்கி
முகர்ந்து
ரசித்து
கூந்தலில் வைக்கிறாள்
மெல்லத் தொடுகிறாள்
படகோட்டி
படகை வேகமாக்குகிறான்
பாய்ந்து வரும் காற்று
படகை
படகோட்டியை
அவளை
அவள் கூந்தலை
அவள் பூவைத்
தீண்டுகிறது
தலையிலிருந்து
நதி விழுவதுபோல்
நதியில்
விழுகிறது பூ
விழும் லாவகத்தில்
சில இதழ்கள்
தனியாகின்றன
முதலில்
மிதந்தது போலவே
இப்போது
மிதக்கிறது பூ
அலையின்
அசைவை வாங்கி
அசைகிறது
தொலைவாகும் படகை
அதிலிருந்து
தன்னை பார்த்து
கையசைக்கும் பெண்ணை
பார்த்தபடி
மிதக்கிறது பூ
காற்றில் அசைந்தது
நதியின்
அலைவுக்கேற்ப
நடனம் நிகழ்ந்தது
மிதந்தது பூ
மிதந்த பூ
படகானது
படகில்
இளைப்பாறிப்போனது
பறவை
பறவை சத்தம் கேட்டு
மீன்கள் வெளிகுதித்து
படகின் சுவரோரம்
முதுகுரசிப் போயின
இப்போது
அதே பூ
படகின் மேல்
கதிர்தீண்ட
ஒளித் திவளைகளுடன்
பார்த்தது
படகோட்டி
பூவை வணங்குகிறான்
மெதுவாய் எடுத்து
படகில் அமர்ந்திருக்கும்
இளவரசி தோற்றம்கொண்ட
பெண்ணிடம் பணிவுடன்
தருகிறான்
அதிசயத்தைப் போல
அவள் வாங்கி
முகர்ந்து
ரசித்து
கூந்தலில் வைக்கிறாள்
மெல்லத் தொடுகிறாள்
படகோட்டி
படகை வேகமாக்குகிறான்
பாய்ந்து வரும் காற்று
படகை
படகோட்டியை
அவளை
அவள் கூந்தலை
அவள் பூவைத்
தீண்டுகிறது
தலையிலிருந்து
நதி விழுவதுபோல்
நதியில்
விழுகிறது பூ
விழும் லாவகத்தில்
சில இதழ்கள்
தனியாகின்றன
முதலில்
மிதந்தது போலவே
இப்போது
மிதக்கிறது பூ
அலையின்
அசைவை வாங்கி
அசைகிறது
தொலைவாகும் படகை
அதிலிருந்து
தன்னை பார்த்து
கையசைக்கும் பெண்ணை
பார்த்தபடி
மிதக்கிறது பூ
Friday, February 18, 2011
முடிவுகள்
நீ உண்ணும்
இந்தத் தூக்க மாத்திரைகள்
உன்னை
ஆழ்ந்த
மிக ஆழ்ந்த
உறக்கத்திற்கு
இட்டுச் செல்லும்
அதன் பிறகு
நீதான்
முடிவு செய்யவேண்டும்
இதை
தற்கொலையாக
மாற்றப்போகிறாயா
என்பதையும்
இல்லை
இது ஒரு
தற்செயல் என
முடிவு செய்து
வாழ்க்கைக்குத்
திரும்ப போகிறாயா
என்பதையும்
இந்தத் தூக்க மாத்திரைகள்
உன்னை
ஆழ்ந்த
மிக ஆழ்ந்த
உறக்கத்திற்கு
இட்டுச் செல்லும்
அதன் பிறகு
நீதான்
முடிவு செய்யவேண்டும்
இதை
தற்கொலையாக
மாற்றப்போகிறாயா
என்பதையும்
இல்லை
இது ஒரு
தற்செயல் என
முடிவு செய்து
வாழ்க்கைக்குத்
திரும்ப போகிறாயா
என்பதையும்
Thursday, February 17, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
373-
கண்ணீர்
கவலையின் திரவமாகவும்
காயத்தின் மருந்தாகவும்
374-
ஓய்வே
உழைக்கச் சொல்கிறது
375-
இரவின் விளிம்பில்
வழியும்
கனவு
கண்ணீர்
கவலையின் திரவமாகவும்
காயத்தின் மருந்தாகவும்
374-
ஓய்வே
உழைக்கச் சொல்கிறது
375-
இரவின் விளிம்பில்
வழியும்
கனவு
Wednesday, February 16, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
370-
அன்பை விநியோகிக்கவே
வந்தோம்
ஆயுதத்தை
தூக்க வைத்தீர்கள்
371-
எப்படி முடியும்
இந்த கவிதை
தெரியாது
எனக்கும்
கவிதைக்கும்
372-
யாருடனும்
போட்டியிட விரும்பாதவன்
தன்னிடமே
தோற்றுவிடுவான்.
அன்பை விநியோகிக்கவே
வந்தோம்
ஆயுதத்தை
தூக்க வைத்தீர்கள்
371-
எப்படி முடியும்
இந்த கவிதை
தெரியாது
எனக்கும்
கவிதைக்கும்
372-
யாருடனும்
போட்டியிட விரும்பாதவன்
தன்னிடமே
தோற்றுவிடுவான்.
சிறுமீன்
அடுக்கி வைத்துவிட்டுப்போன
வார்த்தைகளை
திரும்பவந்து
கலைத்தது குழந்தை
கலைத்த கடலுக்குள்
நீந்தும் சிறுமீன்
நான்
வார்த்தைகளை
திரும்பவந்து
கலைத்தது குழந்தை
கலைத்த கடலுக்குள்
நீந்தும் சிறுமீன்
நான்
Sunday, February 13, 2011
அனுபவ சித்தனின் குறிப்புகள்
364-
எல்லாமே
தொடர்ந்து வரவேண்டும்
எல்லாவற்றையும்
தொடந்து செல்லவேண்டும்
தவிர்க்க வேண்டும்
இந்த நினைவை
365-
மீன்தொட்டியில்
ஊற்றுகிறாள் குழந்தை
கொண்டுவந்த கடலை
366-
கதவடைக்கிறாய்
சாவிதுவாரத்தில்
பரவும் ஒளி
திறக்கப் பார்க்கிறது
உன் இருளை
367-
இந்தப் பள்ளத்தாக்கு
கடவுள் ஊற்றிய
வண்ணங்களால்
நிரம்பி இருக்கிறது
368-
வழி தப்பும் ஆடுகளாய்
நினைவுகள் போகும்
விரட்டிப் பிடித்தாலும்
வேறிடம் மாறும்
369-
தெரிந்தே
தொலைந்திருக்கிறேன்
தேடாதீர்கள்
எல்லாமே
தொடர்ந்து வரவேண்டும்
எல்லாவற்றையும்
தொடந்து செல்லவேண்டும்
தவிர்க்க வேண்டும்
இந்த நினைவை
365-
மீன்தொட்டியில்
ஊற்றுகிறாள் குழந்தை
கொண்டுவந்த கடலை
366-
கதவடைக்கிறாய்
சாவிதுவாரத்தில்
பரவும் ஒளி
திறக்கப் பார்க்கிறது
உன் இருளை
367-
இந்தப் பள்ளத்தாக்கு
கடவுள் ஊற்றிய
வண்ணங்களால்
நிரம்பி இருக்கிறது
368-
வழி தப்பும் ஆடுகளாய்
நினைவுகள் போகும்
விரட்டிப் பிடித்தாலும்
வேறிடம் மாறும்
369-
தெரிந்தே
தொலைந்திருக்கிறேன்
தேடாதீர்கள்
Saturday, February 12, 2011
Subscribe to:
Posts (Atom)