இடம் தெரியாத இடத்தில்
இறங்கிவிட்டேன்
தெரிந்துகொள்ள
எவ்வளவோ
வைத்திருந்தது இடம்
Tuesday, June 30, 2009
Friday, June 26, 2009
வழி மாற்றிய ஒற்றன்
என்னை
வழி மாற்றி அனுப்பிய
ஒற்றனைப்
பார்க்க நேர்ந்தது
அவன் இருந்தான்
ஏறக்குறைய என்
முக சாயலில்
வழி மாற்றி அனுப்பிய
ஒற்றனைப்
பார்க்க நேர்ந்தது
அவன் இருந்தான்
ஏறக்குறைய என்
முக சாயலில்
Thursday, June 25, 2009
மீண்டும் பிறக்கிறது...
உதிரமாகிக்
கொட்டுகிறது கனவு
உக்கிரமாகி
சுடுகிறது இரவு
தன்னை புணர்ந்து
தன்னில் இறந்து
மீண்டும் பிறக்கிறது காமம்
விலங்கின் பற்களுடன்
கொட்டுகிறது கனவு
உக்கிரமாகி
சுடுகிறது இரவு
தன்னை புணர்ந்து
தன்னில் இறந்து
மீண்டும் பிறக்கிறது காமம்
விலங்கின் பற்களுடன்
Wednesday, June 24, 2009
ஒரு நடை பயணத்தில்...
ஒரு நடை பயணத்தில்
பேசிக்கொண்டு போனார்கள்
தந்தையும் மகனும்
வானத்தில் சிறகடிக்கும் பறவை
உனக்குத் தெரிகிறதா
இல்லை எனக்கு
வானம் ஒரு
பறவையின் சிறகாகத்
தெரிகிறது
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
பேசிக்கொண்டு போனார்கள்
தந்தையும் மகனும்
வானத்தில் சிறகடிக்கும் பறவை
உனக்குத் தெரிகிறதா
இல்லை எனக்கு
வானம் ஒரு
பறவையின் சிறகாகத்
தெரிகிறது
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
ஊர்ந்து போகும் ரயில்
படிக்கும் புத்தகத்தின்
வரிகளுக்கிடையே
ஊர்ந்து போகிறது
வேகமாகச் செல்லும்
இந்த ரயில்
வரிகளுக்கிடையே
ஊர்ந்து போகிறது
வேகமாகச் செல்லும்
இந்த ரயில்
அப்பாவின் ரெயின்கோட்
தந்தையின் ரெயின்கோட்டில்
போகும் மகன் உணர்கிறான்
அப்பா நனைவது போன்று
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
போகும் மகன் உணர்கிறான்
அப்பா நனைவது போன்று
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
Sunday, June 21, 2009
மலையின் கருணை
தற்கொலை உச்சிக்கு வந்தவனை
இறங்கிப் போகச் செய்கிறது
மலையின் கருணை
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
இறங்கிப் போகச் செய்கிறது
மலையின் கருணை
*கல்கி தீபாவளி சிறப்பிதழில்(18.10.2009)
வெளியானது
Thursday, June 18, 2009
கடந்து போன வரிகள்
வெட்டப்பட்ட மரம்
துளிர்த்தது
இறந்துபோன முதியவர்
உயிர் பெற்றார்
ஒரு நட்சத்திரம்
அருகில் வந்து
முத்தமிட்டுச் சென்றது
மணல் அடியில்
கிடந்த வளையல் துண்டுகள்
கண்ணீரைக் காட்டின
கடல் மீன்
கரைக்கு வந்து
வார்த்தைகளைக்
கொட்டிவிட்டுப் போனது
இயற்கையின் பரிசுத்தத்தை
வீணாக்கியவர்கள்
தூக்கு தண்டனைப் பெற்றனர்
உதிர்ந்த இலை
உள்ளங்கையில்
விழும்போது
பூவாகி இருந்தது
சேமித்து வைக்கப்பட்ட கோடுகள்
ஓவியங்களாக
மாறிக்கொண்டே வந்தன
ஆண்துணை
தேடிய ஒருவன்
நகரத்து வீதிகளில்
அலைந்து கொண்டிருந்தான்
கடந்து போன
வரிகளைப் பார்த்தபடி
நடந்து கொண்டிருந்தேன் நான்
துளிர்த்தது
இறந்துபோன முதியவர்
உயிர் பெற்றார்
ஒரு நட்சத்திரம்
அருகில் வந்து
முத்தமிட்டுச் சென்றது
மணல் அடியில்
கிடந்த வளையல் துண்டுகள்
கண்ணீரைக் காட்டின
கடல் மீன்
கரைக்கு வந்து
வார்த்தைகளைக்
கொட்டிவிட்டுப் போனது
இயற்கையின் பரிசுத்தத்தை
வீணாக்கியவர்கள்
தூக்கு தண்டனைப் பெற்றனர்
உதிர்ந்த இலை
உள்ளங்கையில்
விழும்போது
பூவாகி இருந்தது
சேமித்து வைக்கப்பட்ட கோடுகள்
ஓவியங்களாக
மாறிக்கொண்டே வந்தன
ஆண்துணை
தேடிய ஒருவன்
நகரத்து வீதிகளில்
அலைந்து கொண்டிருந்தான்
கடந்து போன
வரிகளைப் பார்த்தபடி
நடந்து கொண்டிருந்தேன் நான்
கிளி பொம்மை விற்கும் சிறுமி
கிளி பொம்மை
விற்கிறாள் சிறுமி
வெயிலின் கடுமை
அவள் கால்களை
நிற்க விடாமல் செய்கிறது
ஒவ்வொரு வாகனமாய் ஓடி
கிளி பொம்மையை நீட்டி
வாங்கிக் கொள்ளும்படி
வேண்டுகிறாள்
சிக்னல் விழுவதற்குள்
ஓரிரு பொம்மைகளை
விற்க வேண்டும் என்ற
ஏக்கம் தெரிகிறது
அவள் கண்களில்
தூரத்திலிருந்து
விரட்டுகிறாள் அம்மா
ஒரு காரின்
கண்ணாடி இறங்குகிறது
ஒரு கை நீண்டு
பொம்மையை வாங்குகிறது
பணத்தை வாங்கிக் கொண்டு
சிறுமி சிரிக்க
சிக்னல் விழுகிறது
காரில் ஆடிக்கொண்டே செல்கிறது
கிளி பொம்மை
சிறுமியின் பெயரை
சொல்லியபடி
விற்கிறாள் சிறுமி
வெயிலின் கடுமை
அவள் கால்களை
நிற்க விடாமல் செய்கிறது
ஒவ்வொரு வாகனமாய் ஓடி
கிளி பொம்மையை நீட்டி
வாங்கிக் கொள்ளும்படி
வேண்டுகிறாள்
சிக்னல் விழுவதற்குள்
ஓரிரு பொம்மைகளை
விற்க வேண்டும் என்ற
ஏக்கம் தெரிகிறது
அவள் கண்களில்
தூரத்திலிருந்து
விரட்டுகிறாள் அம்மா
ஒரு காரின்
கண்ணாடி இறங்குகிறது
ஒரு கை நீண்டு
பொம்மையை வாங்குகிறது
பணத்தை வாங்கிக் கொண்டு
சிறுமி சிரிக்க
சிக்னல் விழுகிறது
காரில் ஆடிக்கொண்டே செல்கிறது
கிளி பொம்மை
சிறுமியின் பெயரை
சொல்லியபடி
Saturday, June 13, 2009
Sunday, June 07, 2009
பிடுங்கப்பட்ட உயிர்
நீ எந்த மரத்திலிருந்து
பிடுங்கப்பட்ட உயிர்
தன் பென்சிலிடம் கேட்டபடி
இந்த வரிகளை
எழுதிப் பார்க்கிறாள்
ஒரு சிறுமி
பிடுங்கப்பட்ட உயிர்
தன் பென்சிலிடம் கேட்டபடி
இந்த வரிகளை
எழுதிப் பார்க்கிறாள்
ஒரு சிறுமி
அழகான கூண்டு
பார்க்க அழகாக இருக்கிறது
எப்படி இந்த
குற்றவாளி கூண்டை செய்தீர்கள்
நண்பருக்குச் சொன்னேன்
இது குற்றங்களால்
செய்யப்பட்ட கூண்டு
எப்படி இந்த
குற்றவாளி கூண்டை செய்தீர்கள்
நண்பருக்குச் சொன்னேன்
இது குற்றங்களால்
செய்யப்பட்ட கூண்டு
Monday, June 01, 2009
வெற்றுக்கோப்பை
வெற்றுக்கோப்பை போதும்
என் தாகம் தீர்க்க
நீர் நிரம்பிய பாத்திரங்கள்
அதிகரிக்கவே செய்யும்
தாகத்தை
என் தாகம் தீர்க்க
நீர் நிரம்பிய பாத்திரங்கள்
அதிகரிக்கவே செய்யும்
தாகத்தை
Sunday, May 31, 2009
காற்று படித்த கதை
அம்மா கூப்பிட
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தை
அப்படியே வைத்துவிட்டு
கதையிலிருந்து வெளியேறும்
கதாபாத்திரத்தைப் போல
ஓடுகிறாள் அவள்
மீதிக் கதையை
புரட்டி புரட்டி
படித்துக் கொண்டிருக்கிறது
காற்று
படித்துக் கொண்டிருந்த
புத்தகத்தை
அப்படியே வைத்துவிட்டு
கதையிலிருந்து வெளியேறும்
கதாபாத்திரத்தைப் போல
ஓடுகிறாள் அவள்
மீதிக் கதையை
புரட்டி புரட்டி
படித்துக் கொண்டிருக்கிறது
காற்று
Subscribe to:
Posts (Atom)