Wednesday, April 20, 2022

யாரோ

மலையுச்சிக்கு வந்து

மலையோடு

ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டு

செல்போனைக் கீழே வைத்துவிட்டு

மெல்ல மூச்சை

உள்ளிழுத்து வெளிவிட்டு

குதித்துவிட்டான்

சற்று நேரம் கழித்து

மேலேறி வந்த பெரியவர்

வியர்வையைத் துடைத்து

செல்போனைக் கையில் எடுத்து

சுற்றும் முற்றும் பார்த்துச் சொல்கிறார்

“யாரோ மறந்து வச்சிட்டுப் போயிட்டாங்க’’

“யாரோ வச்சிட்டுக் குதிச்சிட்டாங்க’’

நடுக்கத்துடன் மலை சொன்னது

அவருக்குக் கேட்கவில்லை

 


No comments:

Post a Comment