Saturday, March 16, 2013

அனுபவ சித்தனின் குறிப்புகள்

1003-

அடர்ந்த மெளனத்தைக் 
கடந்து வருவதும் 
கடினமான ஒன்றுதான்

1004-


கால்களைக் 
குத்தாத இருள் 
நடக்கத் துணையாய் 
நட்சத்திரம்

1005-

எதுவுமில்லாத போது 
மெளனம் 
எனதாகிறது

1006-

அள்ளிய எல்லாம் 
வழிந்து போனது 
வெறுங்கையே 
உன் தலைக்கனம் 
முடிந்து போனதா

1007-

பிரபஞ்சம் சொன்னது
உனக்கான செய்தி 
நான்தான்

1008-

நினைவுகள் துரத்த 
ஓடுகிறேன் 
நினைவுகள் நோக்கி




2 comments:

  1. முதல் கவிதையிலேயே மனம் லயித்து விட்டது. அனைத்தும் சிறப்பு.

    ReplyDelete