Tuesday, August 09, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

609-

சொல் திறக்கும்
மொழி

610-

இரவை
மடித்தபடி நடந்தேன்
பகல் வந்தது

பகலை
விரித்தபடி நடந்தேன்
இரவு வந்தது

611-

கடைசி வரை
அழவில்லை
செய்த உறுதியின்
அடியிலிருந்தது
மறைக்கப்பட்ட கண்ணீர்

612-

மரணம் போதும்
எனக்கு
வாழ்வதற்கு

1 comment:

  1. //611-

    கடைசி வரை
    அழவில்லை
    செய்த உறுதியின்
    அடியிலிருந்தது
    மறைக்கப்பட்ட கண்ணீர்//

    மறைக்கப்பட்ட கண்ணீரே மிகுந்த வலி தருவதாக இருக்கிறது

    ReplyDelete