Tuesday, August 09, 2011

நீந்தும் வார்த்தைகள்

படுக்கை அறை
மீன் தொட்டியானது

மீன்களோடு
நீந்தத் தொடங்கினேன்
உறக்கம் கலையாமல்

கடித்து எழுப்பின மீன்கள்
காதருகே வந்த ஒன்று சொன்னது

நீந்தியபடியே தூங்கு
தூங்கியபடியே நீந்தாதே

உடன் எழ
மீன் தொட்டி மறைய

காதில் நீந்தியபடி
இருந்தன வார்த்தைகள்

இன்னும் சொல்லியபடி

3 comments:

  1. "Neendinapadiye thoongu.. thoonginapadiye neendadhe"

    well written :)

    ReplyDelete
  2. //நீந்தியபடியே தூங்கு
    தூங்கியபடிய நீந்தாதே//

    அழகான கவிதை. நன்றி ராஜா சார்.

    ReplyDelete