Saturday, July 16, 2011

நகரத்தில் சந்தித்தவன்

நகரத்தில் சந்தித்தவன்
சொன்னான்

நான் மனிதர்களை
வேட்டையாடும்
மனிதன்

கால்களில்
ஓட்டத்தை குவித்தபடி
கேட்டேன்

இப்போது
நீ என்னை
வேட்டையாடப் போகிறாயா

அது உன் மேல் கமழும்
இறைச்சி வாசனையைப்
பொறுத்தது

மூக்கை விரித்தபடி
சொன்னான்

அவனிடமிருந்து தப்பிக்க
வேகமாக ஓடுகையில்
அவனைப் போலவே
எதிர்பட்டனர்
நிறைய பேர்

1 comment: